நடுநிசி இரவினில்
நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்
நடுநிசி இரவினில்
நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்
என்ன வரையறை இது
இது என்ன வரையறை இது என் உரிமை
எங்கே கலாச்சாரம்
அப்பழுக்கற்ற பவித்ரதத்தை போல ஊளையிடும் உயர்ந்த குடி மக்களே! காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னதே நீங்கள் தான். அப்புறம் எங்கே கலாச்சாரம் கறைபடிந்தது? எதை நீங்கள் கலாச்சாரம் என்று கருதுகிறீர்கள்? சிந்துசமவெளி நாகரீகத்தை மேம்படுத்த தான் நீங்கள் உழைக்கின்றீர்களா? மெசபடோமியாவின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க தான் பிறந்தீர்களா? லெமூரியாவின் பண்பாட்டை பண்படுத்த தான் படையெடுக்கிறீர்களா?
பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் கலாச்சாரம் என்ற தார்ப்பறியத்தை அறியாமல் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கிறீர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என்று? மனித கழிவுகளை அகற்ற மனிதனை தேடும் நீங்கள் கலாசார காப்பகங்கள்?. கலப்படங்களை கலக்கம் இல்லாமல் சேர்க்கும் நீங்கள் பாதுகாவலர்கள்?. மனதில் மதிலிட்டு வீடுகளை தனிமைப்படுத்தி வீழும் நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சீர்குலைக்க வந்த சீர்கேடுகள்.
இது தான் பாலினமா?
குறியீடுகள் இனப்பெருக்கத்தின் தார்ப்பறியம் என்றால், தேவையை நிறைவு செய்த பிறகு இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமே
மஞ்சளில் இறை
அருவருக்கத்தான் செய்கிறது?
நம்மை போன்ற உயர்ந்த மனம் கொண்டவர்களை கண்டால் அருவருக்கத்தான் தான் செய்கிறது
நான் இருக்க மாட்டேனா
உன்னை நான் வெறுக்க வேண்டுமென்றால்
ஓராயிரம் முறையாவது நான் சுக்குநூறாக உடைய வேண்டும்
மதங்கள்
தேவை அளிப்பை நோக்கியது
ஆசைகளை உள்ளடக்கியது
ஆசைகள் திணறல்களின் தெளிவு
தெளிவோ தீர்க்கமான சிந்தனை
சிந்தனையோ வாக்கின் இனிமை
வாக்கோ வளத்தின் அடையாளம்
அடையாளம் மனதின் எழுகைசமூக சிக்கல்கள்
எனக்கான குரலை என்வாயிலாக எழுப்பினால் அது அடுத்தவருக்கு எப்படி இரைச்சலாகும்? எனக்கே தெரியாமல் என்மீது சுமத்தப்பட்ட ஒடுக்குமுறை வன்கொடுமைகளை என் கைப்பட நான் வரலாறு என்கிற பெயரில் எழுதுகிறேன்
திருமணம்
திருமணம் கூட நம்பிக்கையின்மையின் அடையாளம் தான் என்று நான் நினைக்கிறேன். தமிழர்கள் திருமணம் என்ற வைபவத்தை கடைபிடித்தவர்கள் இல்லை. களவு வாழ்க்கையில் நுழைந்து பிறகு கற்பு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாம்!
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யார்த்தன கரணம் என்ப
தொடர்பற்ற நேரம்
தொடுதிரையை திறந்து தினமும் திகைத்து போகிறேன்.
நீ இயங்கலையில் இல்லாததால் இதயம் நோகிறேன். குறுஞ்செய்தி கொண்டென் உள்ளம் கொய்வாயா.?கவனமாக இரு
பெண்ணே!!
கழிப்பறையில்நீ என்னை நினைக்கவில்லை
பயணங்களின் இடையில் கிசுகிசுவென பசிக்கும் அவளின் நினைவுகளுக்கு, பசியார என் வார்த்தைகளை உணவாக்கிக்கொள்கிறாள். ஆசைதீர என் வார்த்தைகளோடு சேர்த்து என்னையும் தின்றாள்... ஆனால் ஏனோ இடைவெளியை விட மறுத்துவிட்டாள்...
இடையிடையே சினுங்கிய அவளின் உடையை படையெடுக்க ஏகாந்த எண்ணம் எனக்கில்லை ... அதனால் எழுந்த எண்ணத்தை உதறவும் மனமில்லை...
உன் கொடியிடையில் விழுந்த நான் விருந்துன்ன முந்தியை பந்தியாக்கு... ஆனால் நான் மட்டுமே நீ விருந்தளிப்பதை பார்க்க தரவேண்டும் நல்வாக்கு...
உன் கண்களை நான் அருகே இருந்தபோது கண்டதில்லை விழியீர்ப்பினால் சிதைந்த இடம் என் இதயமாக மட்டுமே இருக்கும் என்று.
ஆனால்
உன் சுந்தர விழியை காணமல் வாடி வதைபடும் என் ஊமை கண்களுக்கு எப்படி சொல்வேன் நீ என்னை நினைக்கவில்லை??? என்று
எழுதிய மை காய்வதற்குள் என்னை கட்டி அனைக்க வா என் விழியே...உதிர்த்து விட்டு போ!
உன்னை காணும் போது தோன்றிய ஊடலில் நான் உதிர்ந்து தான் போனேன்.. மறுக்கவில்லை, ஆனால் உன் ஊடலில் உருகாத எந்தன் மனம் உந்தன் நிறைந்த காதலின் நேர்த்தியில் களைந்துபோனது ஏனடி??? புயலால் பாதிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கும் என்று அறிவேன். ஆனால் உன் விழியீர்ப்பினால் சிதைந்த இடம் நானாக மட்டுமே இருப்பேன்.
இன்பத்தை ஊற்றாக்கி இதழில் ஆர்ப்பரித்து பார்வையால் கோரத்தாண்டவம் போட உன்னால் மட்டுமே முடியும். வதைபடுவதை அனுபவிக்க யாசகனாய் நிற்கிறேன். ஏனென்று கேட்காமல் யாவென்று அறியாமல் அற்ப ஜீவிதன் போல உன் ஒற்றை பார்வைக்காக
காத்திருக்கும் என்னை ஒருகணம் திரும்பி பாரடி கள்ளி... பரிதவிக்கும் எந்தன் உள்ளம் பசியார உந்தன் விழியை கொஞ்சம் உதிர்த்து விட்டு போ...
காம கடும்புனல் கூட்டமே
முதல் துளியின் சூடான முத்தம்
கார்மேக மேனியில் தேன் போல ஒழுகி விழும் ஏகாந்த மழையில் முதல் துளியை தேடிப் பிடித்து மூச்சு முட்ட முத்தமிட வேண்டும்
நவீன தீண்டாமை
காதல் தொலைநோக்கியில் நீ
சமூக விதைகள்
இந்த சமூகத்தின் ஒற்றை வடத்தை எப்படியாவது இழுத்து கட்டிவிட வேண்டும் என்று எத்தனையோ விடயங்களை கடந்தாயிற்று. இதுவும் கடந்து போகும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே மறக்கவும் பழகியாயிற்று. மனதின் ஓரத்தில் ஓயாமல் முற்றுகை இடும் கவலைகளையும் சமாதானப்படுத்தி முடித்தாயிற்று.
மனசாட்சி
என்மேல் படியும் அத்தனை அழுக்குகளும் எங்கோ யாரோ ஆடையாக உடுத்தி கழற்றியதே. எவ்வளவு தான் நானும் தாங்குவேன்?
வழியெங்கும் புத்தகங்கள்
வழிபாடுகள் ஆக்ரோஷமாக ஓடுகையில் வழிப்போக்கன் நடந்து போகிறான். நடைபாதை வழியெங்கும் புத்தகங்கள்!
வெளிச்சமெங்கும் உன் முகம்
ஒரு எஜமானியின் மனப் புத்தகத்திலிருந்த ஒருபக்கம்
காலை காஃபி
அடர்த்தியான காரிருள் மெல்ல மெல்ல ஒளிபரவிய இடத்தை ஆட்கொள்ளும் போது, எங்கோ புதைக்கப்பட்ட கோபமும் வக்ரமும் இழப்பும் ஏமாற்றமும் சுதந்திரத்தை வரவேற்கும்
சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...