உதிர்த்து விட்டு போ!
உன்னை காணும் போது தோன்றிய ஊடலில் நான் உதிர்ந்து தான் போனேன்.. மறுக்கவில்லை, ஆனால் உன் ஊடலில் உருகாத எந்தன் மனம் உந்தன் நிறைந்த காதலின் நேர்த்தியில் களைந்துபோனது ஏனடி??? புயலால் பாதிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கும் என்று அறிவேன். ஆனால் உன் விழியீர்ப்பினால் சிதைந்த இடம் நானாக மட்டுமே இருப்பேன்.
இன்பத்தை ஊற்றாக்கி இதழில் ஆர்ப்பரித்து பார்வையால் கோரத்தாண்டவம் போட உன்னால் மட்டுமே முடியும். வதைபடுவதை அனுபவிக்க யாசகனாய் நிற்கிறேன். ஏனென்று கேட்காமல் யாவென்று அறியாமல் அற்ப ஜீவிதன் போல உன் ஒற்றை பார்வைக்காக
காத்திருக்கும் என்னை ஒருகணம் திரும்பி பாரடி கள்ளி... பரிதவிக்கும் எந்தன் உள்ளம் பசியார உந்தன் விழியை கொஞ்சம் உதிர்த்து விட்டு போ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக