திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நீ என்னை நினைக்கவில்லை

The bus ride | Nomadic Sahil


நீ என்னை நினைக்கவில்லை

பயணங்களின் இடையில் கிசுகிசுவென பசிக்கும் அவளின் நினைவுகளுக்கு, பசியார என் வார்த்தைகளை உணவாக்கிக்கொள்கிறாள். ஆசைதீர என் வார்த்தைகளோடு சேர்த்து என்னையும் தின்றாள்... ஆனால் ஏனோ இடைவெளியை விட மறுத்துவிட்டாள்... 

இடையிடையே சினுங்கிய அவளின் உடையை படையெடுக்க ஏகாந்த எண்ணம் எனக்கில்லை ... அதனால் எழுந்த எண்ணத்தை உதறவும் மனமில்லை...

உன் கொடியிடையில் விழுந்த நான் விருந்துன்ன முந்தியை பந்தியாக்கு... ஆனால் நான் மட்டுமே நீ விருந்தளிப்பதை பார்க்க தரவேண்டும் நல்வாக்கு...

உன் கண்களை நான் அருகே இருந்தபோது கண்டதில்லை விழியீர்ப்பினால் சிதைந்த இடம் என் இதயமாக மட்டுமே இருக்கும் என்று.

ஆனால்

உன் சுந்தர விழியை காணமல் வாடி வதைபடும் என் ஊமை கண்களுக்கு எப்படி சொல்வேன் நீ என்னை நினைக்கவில்லை??? என்று

எழுதிய மை காய்வதற்குள் என்னை கட்டி அனைக்க வா என் விழியே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...