வியாழன், 10 செப்டம்பர், 2020

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம்

வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் ''தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல.

நூல்கள் காலத்தை ஒட்டியது. காலத்தின் நோக்கத்தை அடைய கவிதைகளை உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால் கருத்தும் அதைச் சார்ந்த முரண்களும் விவாதிக்கப்படாமல் இருக்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்ட சமூக அமைப்பு, எத்தகைய சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்தியா மிகச் சரியாக முன்னுதாரணம்.
தமிழ்தேசியம் பேசும் நாட்டில் சமூக சிக்கல்கள் சின்னங்களாக உருவெடுக்கிறது. நாளடைவில் அதுவே பழக்க வழக்கங்களை முன்வைத்து கலாச்சார மையமாக வழியமைத்து நாகரீகமாக பழிவாங்குகிறது.
வள்ளலாரின் கூற்றுக்களை ஒருவேளை ஏற்றுக் கொண்டிருந்தால் பெரியாரின் பகுத்தறிவு ரீதியான கொள்கைகளுக்கு தமிழகத்தில் வேலையே இல்லை!
சமூக பார்வையில் இருந்து எறியப்படும் ஒவ்வொரு பார்வையும் எங்கேயோ ஒரு பெரியாரை, வள்ளலாரை, தீரனை தோற்றுவிப்பதில் தவறேதும் இல்லையே. மதம் முழுக்க முழுக்க ஒரு கட்டமைப்பின் மூலம். அதற்கு முரணாக எழும் பகுத்தறிவு மத மூடநம்பிக்கைகளை களைவதில் என்ன தவறு இருக்கிறது?
மதம் என்பது சீரமைப்போ சிக்கலோ? மனித சங்கிலியின் தேடல் மேலோங்குவதை இரண்டும் வெவ்வேறு கோணங்களில் புனரமைத்தால் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...