என்ன வரையறை இது
இது என்ன வரையறை இது என் உரிமை
எளிதில் கடந்து விடக் கூடிய வலி இல்லை இது. ஆனால் அந்த வலிகளை விட நடமாடும் அது குறித்த வரையறைகள் தான் அதிகம் வலிகளை உண்டாக்கும்
ஊரறிந்து உணவிட்டு பலநாட்கள் பொத்தி பொத்தி வைத்த கலனொன்று திடிரென கழன்று விழுகையில் யாதொன்றும் அறியாமல் தான் நின்றேன்
பிறந்த வலியினும் கொடிய வலி இதை யாருமே அறியாத போது தான் ஏற்படுகிறது. அறியாமை கூட அறிந்திட வாய்ப்பு உள்ளது. அதை அறிமுகப்படுத்திய எவரும் அறிகிலை. தவறு என்னுடையதா? விழுந்து சரிந்து பின் எழுந்து நிமிர்ந்தது அன்றொரு நாள் மட்டுமே
பிறகு, நிமிர்ந்தபொழுது திமிரென்றும் நடந்தபோது கர்வமென்றும் ஓடினபோது தலைக்கணமென்றும் வசைபாடிய மானிடர்களின் வாயில் நான் அபத்தமாக நிற்கிறேன்
பருவ வயதில் பாழாப்போன பரீட்சையமற்ற பாசவார்த்தைகள்.
பழகிய பிறகு பருவத்தில் விளைத்திடும் பசிவார்த்தைகள்.
விழுந்துவிட்ட நேரத்தில் சரிந்துப்போனது சாம்பலொன்று.
எழுந்தபோது எட்டிப்பார்த்த மழையாய் கலைந்தது.
கலகலத்துப் போன என் கண்கள் ஏனோ கருக ஆரம்பித்தது.
கலையாடிய கைகள் கட்டப்பட்ட சருகாய் ஒடிந்தது.
நடைசூடிய கால்கள் மெல்ல இறங்கியது
இடுப்புக்கிடையில் ஒரு அழுத்தமான நம்பிக்கை. அலாதிய வலிகளின் உல்லாச ஓசை. பின்வாங்கும் பெருமூச்சு. பிதற்றிக் கொண்ட தொடைகள். பிணைக்கைதியாய் மற்றவர்கள் பார்வை
ஒளிந்து ஒளிந்து ஓடுகையில் ஓட்டம் கூட அடம் பிடித்த நிமிடங்களில் நான் அனுபவித்த வலிகளை அகற்ற கூட ஆட்கள் இல்லை. ஆமாம் ஆட்கள் இருந்தும் இல்லை
நின்ற இடம் ஒரு புனிதமான இடமாம். அதனால் தீட்டு பரவி திருத்தம் செய்திடுமாம், பாவம் அவர்களுக்கு புரியவில்லை, அங்கும் அந்த வலிகளை தாங்க முடியாமல் கல்லான கடவுளை
போதும். இது தீட்டென உணர்ந்தால் படைத்த அவன் இதில் பாவத்தை கழுவிக்கொள்ளட்டும்
மாதவிடாயே!
நீ என்ன செய்தாய், பாவம் நீ.
உன் வலிகளை விட இவர்களின் வரையறைகள் எனக்கு வலிக்கிறது! 😢
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக