ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

நவீன தீண்டாமை

No photo description available.


நவீன தீண்டாமை

எனக்கான தேடலை நான் கூர்ந்து கவனித்து ஆழமாக பயணித்து அதில் முதிர்ச்சி அடையும் வரை போராடி போராடி இரத்தங்களை வியர்வையாக வெளியேற்றுகையில் எனக்கு சற்றும் பொருந்தாத பெருவாரியான சுமைகளை திட்டமிட்டு திணிப்பது தான் நுழைவுத் தேர்வின் அடிப்படை நோக்கமோ?
நவீன தீண்டாமையை இந்த இளைஞர் கூட்டம் எதிர்கொள்ளும் போது என் உடலில் குருதி இல்லாமல் போயிருக்கும். வளர்ந்துவரும் கல்வியறிவு இதை மறைமுகமாக கட்டாயமாக்குவது ஏற்புடையதாக இல்லை. ஒன்றை மட்டும் ஆழமாக நான் பதிவுசெய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால், எத்தனை சுமைகளை திட்டமிட்டு திணித்தாலும், நாங்கள் மீண்டும் மீண்டும் முளைப்போம்.
தீண்டாமை நுழைவுத் தேர்வுகளாக வடிவம் எடுக்கிறது. அரசு அதற்கு அடித்தளம் போடுகிறது. பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி வகுப்புகள் நடைபெறாமல் போவது போல், ஒருநாள் கல்வி ஏனென்று மாணவர்கள் பள்ளிகளை நோக்கி நடக்காமல் போக வாய்ப்பு உண்டு.
அரசியல் சமூக மாற்றமே ஒழிய, தனிநபர் சார்ந்த பெருமை சேர்க்கும் செயல் அல்ல. இறுதியாகவும் எச்சரிக்கை செய்கிறேன் மத்திய அரசு தமிழ்நாட்டில் பல நவீன தீண்டாமையை விதைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...