அடுக்கடுக்காய் எத்தனையோ ஜவுளி கடைகள்
அதற்கு அருகிலேயே சாமான்யர்கள் தலையில் துனிமூட்டைகள்
அழகழகாய் ஆடம்பர பொருட்கள் பக்கத்திலே கையில் உறையும் கைவினைக் கலைகள்
பளபளப்பாய் பாத்திரங்கள் நிற்கும் தூரத்தில் ரோட்டு கடைகள்
செயற்கை மாடங்களில் செறிவூட்டப்பட்ட பழங்கள் சுவற்றை தாண்டி நிற்கும் சிவந்த கைகளின் அழகுகள்
இவையெல்லாம் எதையோ சொல்கிறது. அதை கவனிக்காத மனங்கள் பரிகாசம் செய்து செல்கிறது
தூரத்தில் ஒலிக்கும் தொலைபேசியை அடையாளம் காணும் நாம் தான் கூடவே இருக்கும் பலரை அடையாளம் காண மறுக்கிறோம்
இவர்கள பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் பெருமை கொள்ள தகுதியான நபர்கள் இவர்கள் என்று நான் நம்புகிறேன்
அம்பானி நடைபோடும் அதே சாலையில் தான் இந்த சாமான்யர்கள் சலிக்காமல் உழைக்கிறார்கள் என்பதை நம்மால் மறுத்து விட முடியுமா? பாடங்களை பயிற்றுவிக்கும் ஒருவருக்கு தான் பயிற்சி பொருந்தும். ஆனால் அனுபவத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும்
என்றோ ஒருநாள் நானும் அம்பானி ஆவேன் என்று தினமும் நினைத்துக் கொண்டு தன்னை உழைக்க வருத்திக் கொண்டு ஓடும் இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் என்னை இவர்களின் மீதான பார்வையை மாற்றியது
அந்த நம்பிக்கை பிழைப்பு மீதானது அல்ல. உழைப்பு மீதான பெரும் விருப்பம். அது தான் அவர்களை என்றுமே உயிரோட்டம் நிறைந்த புதியநீராக ஓடச்செய்கிறது
சாமான்யர்கள் குரல் ஒலிக்கிறது. அதை தடைசெய்வது பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அல்ல. அதை குரலாகவே எண்ணாத நடைபாதை மானிட பரிகாசம் தான்
குப்பைகளை வாங்குபவர்கள் பெருமையாகவும் போடுபவர்கள் கீழாகவும் பார்க்க நாம் என்றைக்கு கற்றுக் கொள்கிறோமே அன்றே அந்த குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக