மலர்வளையம்
நீ எனக்கான உறவு இல்லை என ஒவ்வொரு முறையும் உணர்த்தும் போது,
என் நெஞ்சே என்னைக் கடந்து போகிறது
அன்பை நீ உதறிச் செல்ல காரணமாக நான் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்கே என் மீது அருவருப்பாக தோன்றுகிறது
இந்த நாள் இதை விட பெரிய இழப்பை எனக்கு அளித்திட முடியாது என்று நான் நினைத்தேன்
உண்மையில் இந்த நாளினும் இனிய நாளை நான் பெற்றிருக்க வாய்பில்லை என்று உன்னை கடந்த பின்பு தான் தெரிந்தேன்
உன் மார்போடு உறவாடிய இரவுகளில் என் மனதோடு பிசுபிசுத்துப் போன நம் காதலுக்கு தெரியாது அது அழுகிய ஆசையின் அர்த்தமற்ற அபத்தமென்று.
இந்நாளில் தெரிந்த உண்மை அந்நாளில் அறிந்திருந்தால் நான் இன்று விலைமதிக்க முடியாத கண்ணீரை உனக்காக சிந்தியிருக்க மாட்டேன்
நான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் வீணென்று என் கண்கள் காய்ந்த போது தான் அறிந்தேன்
பரவாயில்லை,
அன்பு மிகவும் மென்மையானது.
அதை உன் கரடுமுரடான இதயத்தில் வைத்தது என்னுடைய தவறு தான்
நிச்சயம் இதை நீ படிப்பாய்.
அப்போதேனும் தெரிந்துக்கொள்.
நீ என்னை பிரிந்த நொடிகளுக்கு ஒரு நொடி முன்பு நான் உன் காதலுக்கு மலர்வளையம் வைத்திருப்பேன் என்று 🤷🏻♂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக