திங்கள், 10 ஆகஸ்ட், 2020

திருமணம்

Men want to marry younger women. Don't believe it if you are told ...


திருமணம்

திருமணம் கூட நம்பிக்கையின்மையின் அடையாளம் தான் என்று நான் நினைக்கிறேன். தமிழர்கள் திருமணம் என்ற வைபவத்தை கடைபிடித்தவர்கள் இல்லை. களவு வாழ்க்கையில் நுழைந்து பிறகு கற்பு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாம்!


என்று சந்தேகம் எழுந்ததோ அன்றே தாலி என்கிற முறைமை தேவைப்பட்டது. அகக் கோட்பாட்டின் சீர்கேடு திருமணம் என்கிற பெயரில் வந்ததாக கருதுவதில் தவறில்லை

நீதி காப்பியம் தோன்றியதற்கு கன்னகி காரணமாகவும் இருக்கலாம். ஆனால் கோவலனை சீர்செய்ய தவறிய பொறுப்பு கன்னகியைச் சேரும். அவள் தேரா மன்னா என்றதற்கு பதில் தோற்றா ஒழுக்கா என்று கோவலனை கேட்டிருந்தால் அவளின் வாழ்வு இன்புற்றிருக்கும்

இந்த தவறு சமூகத்தை சார்ந்த அறநெறி கொள்கைகளின் முறையின்மையின் வெளிப்பாடு

எல்லை நீத்த பிரபஞ்சத்தை ஒரே ஒரு சொல்லில் சுட முடிந்த சீதை ராமனுக்கு காத்திருக்க வேண்டியதன் அவசியம் அறிவேன். ஆனால் ராமனின் தவறுகள் வேடிக்கையாக பார்க்கப்படுவதும் ராவணனின் செயல் தூற்றப்படுவதும் சமூகத்தை ஒரு முறையாவது கேள்வி கேட்க தோன்றுகிறது

வாழ்வியல் பந்தங்களில் சார்பு நிலை சரியில்லாமல் போனதற்கு சீதையின் தவறு ஒரு மகச்சான்று

தொல்காப்பியம் கூட புறத்தை இருகூறுகள் கொண்டே சாடியதன் அர்த்தம் அகத்திற்கு கொடுத்த முன்னுரிமையை வெளிக்கொனர்கிறது

தன்னை இழந்த அகதி தன் உடையை இழக்க தகுதி வாய்ந்தவன் இல்லை, இருப்பினும் பந்தயப் பொருளாக த்ரௌபதியை வைத்தது உரிமை மீறல் தானே

அறம் வளர்த்த சபையில் தர்மம் ஸ்தாபிக்காமல் போனதற்கு திருமண பந்தங்கள் ஒழுங்காக வரையறை செய்யாமல் போனதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறதே

சபை மௌனத்தை ஆதரித்தது சத்திய வாக்குரைக்கும் உத்தமனின் வேதியரை நிற்கவைத்து கேள்வி அம்புகளை தொடுத்தது போல இருந்திருக்கும்.

புராணங்களை மத உணர்வோடு அனுகாமல் உளவியல் ரீதியாக அனுகுவது மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் நமக்கு நாமே புரிதலை ஏற்படுத்த காலத்தால் வடிவெடுத்த  வாசகங்கள்.

ஓடமும் ஒரு நாள் ஓடையில் ஓடும்
ஓடையும் ஒரு நாள் ஓடத்தில் ஓடும்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யார்த்தன கரணம் என்ப

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...