திங்கள், 10 ஆகஸ்ட், 2020

இது தான் பாலினமா?

To achieve gender equality, we must first tackle our unconscious ...


இது தான் பாலினமா?

குறியீடுகள் இனப்பெருக்கத்தின் தார்ப்பறியம் என்றால், தேவையை நிறைவு செய்த பிறகு இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமே


ஆனால் அதற்கு பின்னும் நடைபெறும் கூடல்கள், தேவைக்காக தான் நடக்கிறதா இல்லை இன்னும் தேவை இருக்கிறது என்று நடக்கிறதா.
உறவு என்று சொல்லி அசிங்கமான வார்த்தைகளை கொட்டாதீர்கள்

எதற்காக கூடல்கள் நடக்கிறது என்பதை அறியவில்லை.
எது உறவு என்பதை கூட அறியவில்லை.
உபதேசம் உரைக்க ஊருக்கு பத்து பேர் பைத்தியமாக சுற்றுகிறார்கள்.
பாலினங்களை படைத்த இறை பாலினம் யாதென அறிவீர்களா

அதற்கு குறியீடுகள் உண்டென வழிபடுபவர்கள்,
உண்மையில் அப்படி தான் இறை இருக்க முடியும் என்று கூற முடியுமா?

எதை முன்னிறுத்தி, உடலுறவுகள் நடைபெறுகிறது.
இது பாலின சமத்துவமா இல்லை பாலின கலாச்சாரமா. 
தன்னை முன்னிலை படுத்த நடக்கும் வேட்டையா.
வேடிக்கை மனிதர்கள் விவரம் அறிவார்களா 
இல்லை விவகாரம் விளைக்கிறார்களா

உண்மை யாதென இறைக்கு தெரியுமோ. ஒட்டிக் கொண்ட சதைகள் பாலுணர்வை தூண்டுகிறது என்றால், உணர்வுகளை குறியீடுகள் நிர்ணயம் செய்கிறதா இல்லை உணர்வுகளை வெளிப்படுத்த குறியீடுகள் உள்ளனவா

அர்த்தங்கள் அறிந்திட தகவல்கள் உள்ளனவா
அறிந்திட்ட பிறகு அதன் பின்னனி புலப்படுமா

உணர்வுகளை உள்ளடக்கிய ஊண் கொண்ட பிண்டம், எத்தனை பிரிவினையை நிகழ்த்துகிறது. அதற்காக அலைந்திடும் இந்த காம கடும்புனல் கூட்டம் கருதிடா உணர்வுகளை காமத்தின் நிலைப்பாடு என நினைக்கும் புரிதல் முறையானதா. 

இச்சைக்கு பிச்சையாகும் இந்த கூட்டம் எதைத்தான் அறிந்து வைத்திருக்கும்?

அட காமமே,
படுத்த படுக்கை களைவதற்குள் உன்மேல் விழும் அத்தனை குற்றச்சாட்டும் உன்னை மையப்படுத்தி நடக்கிறதென இந்த கூட்டம் முறையிடும் அவலத்தை நீ யாரிடம் முறையிடுவது என புலம்புவதற்கு நான் அடியெடுத்து கொடுக்கிறேனா

முன்னுதாரணமாக இருக்கும் இவர்கள் உன்னை முன்னுக்குப் பின் முரணாக குறைகூற நீ காரணமா.
கடவுளுக்கும் அடையாளம் தெரியாத இனம், கழுதைக்கு கால்கள் மூன்றென சொன்னால் நான் நம்புவேனா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...