திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நான் இருக்க மாட்டேனா

நான் இருக்க மாட்டேனா

உன்னை நான் வெறுக்க வேண்டுமென்றால்

ஓராயிரம் முறையாவது நான் சுக்குநூறாக உடைய வேண்டும்


ஒருமுறையாவது உன் நினைவுகளை என்னுள்ளே நிறுத்திட வேண்டும்

ஒருகணமேனும் உன் காதலை மறுத்திட வேண்டும்

இதெல்லாம் நடக்குமாயின் ஒரு நொடியேனும் என்னை கொன்றிட வேண்டும்

என்னை பிரிய வேண்டும் என்று முடிவானப்பின் எதற்கு பிரிவு என்கிற உறவு

கசப்பாகி போனது நான் மட்டுமல்ல நம் காதலும் தான்

நீ நடந்து போன பாதையை என் காதலால் துடைக்கின்ற துயரம் அறிவாயா?

என்றோ நீ விட்டுச்சென்ற ஆடையின் கசங்கிய வாசனைகள் என்னை கேட்கின்றன கூடல் இதற்காக தானா என்று

உன் குறுஞ்செய்தியால் விடிந்த என் காலை பொழுது கானாமல் போனதோ

காஃபியுடன் காத்திருந்த கைகள் கட்டப்பட்டதோ

உன் உயரங்களை தாண்டாத காலனிகள் முட்கள் ஆனதோ

சாலைப் பயணங்களில் வேகத்தடைகள் விடைபெற்றுக் கொண்டதோ

இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை 😏

உன்னால் என்னைப் பிரிந்து இருக்கமுடியுமானால் நான் இருக்க மாட்டேனா? மாறுகிறேன், மறக்கிறேன் மனம் திறக்கிறேன்

இதோ, எனக்கான காலை, காஃபி, காலணிகள், வேகத்தடைகள்

நானும் உனக்கு சொல்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...