திங்கள், 10 ஆகஸ்ட், 2020

கவனமாக இரு


கவனமாக இரு

பெண்ணே!!

கழிப்பறையில்
கவனம்...!
குளியறையில்
கவனம்...!
படுக்கையறையில்
கவனம்...!
பள்ளியறையில்
கவனம்...!
அலுவலகறையில்
கவனம்...!
கோவில் கருவறையில்
கவனம்...!
பேருந்து பயணத்தில்
கவனம்...!
இரயில் பயணத்தில்
கவனம்...!
பாலூட்டும் அறையில்
கவனம்...!
மருத்துவறையிலும்
கவனம்...!
ஆடை மாற்றும் அறையிலும்
கவனம்...!
நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
தாயின் கருவறையிலும்
கவனமாக இரு,
பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
கவனிப்பாயா...?
சில
காம வெறிநாய்களின்
கண்களை
கண்காணித்து கொண்டு
இருப்பாயா...?
பெண்ணின் கவனத்திற்கான
பதிவு இல்லை...!

ஒரு ஆணாக இருப்பதின்
அவமானத்திற்க்கான பதிவு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...