வெள்ளி, 4 செப்டம்பர், 2020
இரக்கமில்லா இந்திய அரசியல்
திங்கள், 10 ஆகஸ்ட், 2020
நடுநிசி இரவினில்
நடுநிசி இரவினில்
நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்
மலர்வளையம்
நான் இருக்க மாட்டேனா
நான் இருக்க மாட்டேனா
உன்னை நான் வெறுக்க வேண்டுமென்றால்
ஓராயிரம் முறையாவது நான் சுக்குநூறாக உடைய வேண்டும்
ஒருமுறையாவது உன் நினைவுகளை என்னுள்ளே நிறுத்திட வேண்டும்
ஒருகணமேனும் உன் காதலை மறுத்திட வேண்டும்
இதெல்லாம் நடக்குமாயின் ஒரு நொடியேனும் என்னை கொன்றிட வேண்டும்
என்னை பிரிய வேண்டும் என்று முடிவானப்பின் எதற்கு பிரிவு என்கிற உறவு
கசப்பாகி போனது நான் மட்டுமல்ல நம் காதலும் தான்
நீ நடந்து போன பாதையை என் காதலால் துடைக்கின்ற துயரம் அறிவாயா?
உன் குறுஞ்செய்தியால் விடிந்த என் காலை பொழுது கானாமல் போனதோ
காஃபியுடன் காத்திருந்த கைகள் கட்டப்பட்டதோ
உன் உயரங்களை தாண்டாத காலனிகள் முட்கள் ஆனதோ
சாலைப் பயணங்களில் வேகத்தடைகள் விடைபெற்றுக் கொண்டதோ
இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை 😏
உன்னால் என்னைப் பிரிந்து இருக்கமுடியுமானால் நான் இருக்க மாட்டேனா? மாறுகிறேன், மறக்கிறேன் மனம் திறக்கிறேன்
இதோ, எனக்கான காலை, காஃபி, காலணிகள், வேகத்தடைகள்
நானும் உனக்கு சொல்கிறேன்
சமூக சிக்கல்கள்
சமூக சிக்கல்கள்
எனக்கான குரலை என்வாயிலாக எழுப்பினால் அது அடுத்தவருக்கு எப்படி இரைச்சலாகும்? எனக்கே தெரியாமல் என்மீது சுமத்தப்பட்ட ஒடுக்குமுறை வன்கொடுமைகளை என் கைப்பட நான் வரலாறு என்கிற பெயரில் எழுதுகிறேன்
உண்மையில் அது ஆபத்து அல்ல. அசிங்கமும் அல்ல. அறியாமை கூட இல்ல. அதை அறிய முற்படாத எண்ணம் மட்டுமே
கையெழுத்து மறைக்கப்படவில்லை மாறாக மறுக்கப்பட்டது. இது தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கலந்தோடும் கலாசாரம்
அவரவர் தேவை என்ன என்பதை கூட்டம் போட்டு கட்டமைத்து அடுக்குமாடிகளாக சமூக தேவைகளை முறன்களாக மாற்றியுள்ளோம்.
கருத்துக்களால் அழுகிய அத்தனை பெரிய இனத்தின் அடையாளம் தெரியாத சிலர் எதோ வந்தது வாழ்வதற்கே என்பது போல் ஓடுகிறார்கள்.
என்னைத் தீண்டு
தீவீரத்தால் என்னை திணறச்செய்
வெப்பத்திற்கும் வேகத்திற்கும் கடமையாற்று
உடலுக்கும் உடமைக்கும் பரிவுயில்லை என்பதை முழுதாக்கு
என் முந்தானை மோகத்தை வெளியேற்று
நான் கொண்ட கள்வனே
தொடர்பற்ற நேரம்
தொடர்பற்ற நேரம்
தொடுதிரையை திறந்து தினமும் திகைத்து போகிறேன்.
நீ இயங்கலையில் இல்லாததால் இதயம் நோகிறேன். குறுஞ்செய்தி கொண்டென் உள்ளம் கொய்வாயா.?இல்லை குறட்பதிவின் வாயிலாக கொஞ்சி செல்வாயா.? கைப்பேசியில் உரையாட நாவும் துடிக்க
காரணமே இல்லாது நாணம் தடுக்க
முகநூலும் பகிரியும் என் தோழியாகி
முயல்கிறதே பசலை தீர்க்க யாதுமாகி
தொடர்பற்றதாய் உணர்கின்ற நேரம் யாவும்
தொடர்கிறது கற்பனையாய் நம் காதற்கோலம்.
அடுக்குமோ என் தலைவா
நம் அன்பை அடைக்க.
கவனமாக இரு
கவனமாக இரு
பெண்ணே!!
கழிப்பறையில்கவனம்...!
குளியறையில்
கவனம்...!
படுக்கையறையில்
கவனம்...!
பள்ளியறையில்
கவனம்...!
அலுவலகறையில்
கவனம்...!
கோவில் கருவறையில்
கவனம்...!
பேருந்து பயணத்தில்
கவனம்...!
இரயில் பயணத்தில்
கவனம்...!
பாலூட்டும் அறையில்
கவனம்...!
மருத்துவறையிலும்
கவனம்...!
ஆடை மாற்றும் அறையிலும்
கவனம்...!
நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
தாயின் கருவறையிலும்
கவனமாக இரு,
பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
கவனிப்பாயா...?
சில
காம வெறிநாய்களின்
கண்களை
கண்காணித்து கொண்டு
இருப்பாயா...?
பெண்ணின் கவனத்திற்கான
பதிவு இல்லை...!
அவமானத்திற்க்கான பதிவு...!
நீ என்னை நினைக்கவில்லை
நீ என்னை நினைக்கவில்லை
பயணங்களின் இடையில் கிசுகிசுவென பசிக்கும் அவளின் நினைவுகளுக்கு, பசியார என் வார்த்தைகளை உணவாக்கிக்கொள்கிறாள். ஆசைதீர என் வார்த்தைகளோடு சேர்த்து என்னையும் தின்றாள்... ஆனால் ஏனோ இடைவெளியை விட மறுத்துவிட்டாள்...
இடையிடையே சினுங்கிய அவளின் உடையை படையெடுக்க ஏகாந்த எண்ணம் எனக்கில்லை ... அதனால் எழுந்த எண்ணத்தை உதறவும் மனமில்லை...
உன் கொடியிடையில் விழுந்த நான் விருந்துன்ன முந்தியை பந்தியாக்கு... ஆனால் நான் மட்டுமே நீ விருந்தளிப்பதை பார்க்க தரவேண்டும் நல்வாக்கு...
உன் கண்களை நான் அருகே இருந்தபோது கண்டதில்லை விழியீர்ப்பினால் சிதைந்த இடம் என் இதயமாக மட்டுமே இருக்கும் என்று.
ஆனால்
உன் சுந்தர விழியை காணமல் வாடி வதைபடும் என் ஊமை கண்களுக்கு எப்படி சொல்வேன் நீ என்னை நினைக்கவில்லை??? என்று
எழுதிய மை காய்வதற்குள் என்னை கட்டி அனைக்க வா என் விழியே...உதிர்த்து விட்டு போ!
உதிர்த்து விட்டு போ!
உன்னை காணும் போது தோன்றிய ஊடலில் நான் உதிர்ந்து தான் போனேன்.. மறுக்கவில்லை, ஆனால் உன் ஊடலில் உருகாத எந்தன் மனம் உந்தன் நிறைந்த காதலின் நேர்த்தியில் களைந்துபோனது ஏனடி??? புயலால் பாதிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கும் என்று அறிவேன். ஆனால் உன் விழியீர்ப்பினால் சிதைந்த இடம் நானாக மட்டுமே இருப்பேன்.
இன்பத்தை ஊற்றாக்கி இதழில் ஆர்ப்பரித்து பார்வையால் கோரத்தாண்டவம் போட உன்னால் மட்டுமே முடியும். வதைபடுவதை அனுபவிக்க யாசகனாய் நிற்கிறேன். ஏனென்று கேட்காமல் யாவென்று அறியாமல் அற்ப ஜீவிதன் போல உன் ஒற்றை பார்வைக்காக
காத்திருக்கும் என்னை ஒருகணம் திரும்பி பாரடி கள்ளி... பரிதவிக்கும் எந்தன் உள்ளம் பசியார உந்தன் விழியை கொஞ்சம் உதிர்த்து விட்டு போ...
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020
முதல் துளியின் சூடான முத்தம்
முதல் துளியின் சூடான முத்தம்
கார்மேக மேனியில் தேன் போல ஒழுகி விழும் ஏகாந்த மழையில் முதல் துளியை தேடிப் பிடித்து மூச்சு முட்ட முத்தமிட வேண்டும்
உலகின் அழகெங்கும் நான்
காதல் தொலைநோக்கியில் நீ
காதல் தொலைநோக்கியில் நீ
சமூக விதைகள்
சமூக விதைகள்
இந்த சமூகத்தின் ஒற்றை வடத்தை எப்படியாவது இழுத்து கட்டிவிட வேண்டும் என்று எத்தனையோ விடயங்களை கடந்தாயிற்று. இதுவும் கடந்து போகும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே மறக்கவும் பழகியாயிற்று. மனதின் ஓரத்தில் ஓயாமல் முற்றுகை இடும் கவலைகளையும் சமாதானப்படுத்தி முடித்தாயிற்று.
மனசாட்சி
மனசாட்சி
என்மேல் படியும் அத்தனை அழுக்குகளும் எங்கோ யாரோ ஆடையாக உடுத்தி கழற்றியதே. எவ்வளவு தான் நானும் தாங்குவேன்?
வழியெங்கும் புத்தகங்கள்
வழியெங்கும் புத்தகங்கள்
வழிபாடுகள் ஆக்ரோஷமாக ஓடுகையில் வழிப்போக்கன் நடந்து போகிறான். நடைபாதை வழியெங்கும் புத்தகங்கள்!
வெளிச்சமெங்கும் உன் முகம்
வெளிச்சமெங்கும் உன் முகம்
ஒரு எஜமானியின் மனப் புத்தகத்திலிருந்த ஒருபக்கம்
காலை காஃபி
காலை காஃபி
அடர்த்தியான காரிருள் மெல்ல மெல்ல ஒளிபரவிய இடத்தை ஆட்கொள்ளும் போது, எங்கோ புதைக்கப்பட்ட கோபமும் வக்ரமும் இழப்பும் ஏமாற்றமும் சுதந்திரத்தை வரவேற்கும்
காதல் கடிகாரங்கள்
காதல் கடிகாரங்கள்
கைக் கடிகாரத்தை உற்று நோக்கினால் இப்போது தான் எதோ காலம் நகர்வது போன்ற பிரமை என்னுள் எழுகிறது
உடைந்து போவதற்கு முன்
உடைந்து போவதற்கு முன்
இன்னும் எத்தனை இரவுகளை விழுங்கிவிட போகிறதோ உந்தன் நினைவுகள்
சமூக பார்வையில் மதம்
சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...
-
என்ன வரையறை இது இது என்ன வரையறை இது என் உரிமை எளிதில் கடந்து விடக் கூடிய வலி இல்லை இது. ஆனால் அந்த வலிகளை விட நடமாடும் அது குறித்த வரையறைகள்...
-
மலர்வளையம் நீ எனக்கான உறவு இல்லை என ஒவ்வொரு முறையும் உணர்த்தும் போது, என் நெஞ்சே என்னைக் கடந்து போகிறது அன்பை நீ உதறிச் செல்ல காரணமாக நான் இ...