கிறுக்கல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறுக்கல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இரக்கமில்லா இந்திய அரசியல்

இரக்கமில்லா இந்திய அரசியல்

இங்கே இறை காப்பாற்றும் என நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் தள்ளாடும் ஒவ்வொரு பிரஜையின் மிகச்சிறிய ஆசை, வீடு போய் சேரமுடியாதா என்பது தான்.
அரசின் கொள்கையில் நீதிமன்றங்களுக்கு வேலையில்லை என தீர்ப்பெழுதும் நடுநிலை தராசில் முள் இல்லாதது வழக்கத்திற்கு மாறானதாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குவதால் மேம்படும் என்பது பழக்கப்பட்ட ஒன்றானாலும் 20 லட்சம் கோடியில் உருவாக்கப்படும் உயர்தர துணுக்குகள் வேதனையான உண்மை.
எனக்கு அரசின் கொள்கையில் எதிலும் உடன்பாடு இல்லை என்றாலும் சிலவற்றில் அழுத்தமாக உண்டு.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் மீதான கடுமையான அக்கரை உள்நாட்டு மக்களின் மீது இல்லாததின் பின்னால் உள்ள அரசியல் நோக்கத்தை பாராட்டியாக வேண்டும்.
மது பிரியர்களை கொண்டாடும் மாநிலங்களில் மனித உயிர்கள் பற்றிய கவலைகள் சிறிதும் இல்லாமல் அமல்படுத்தப்படும் உயர்ந்த அவசர சட்டங்களை மனதார பாராட்டிட வேண்டும்.
இதைவிட இன்னொரு அபூர்வமான செய்தி என்னவென்றால், கோடிக்கணக்கான மக்களின் கூந்தல் பராமரிப்பு. மக்களின் கூந்தலை பராமரிக்க செலவழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொண்டைக் கடலை மதிப்பு மிக்க இந்திய வருவாய்கள் தான்.
கஞ்சிக்கு வழியில்லாமல் மக்கள் போராடும் போதும் அவர்களின் தொழில்களை மேம்படுத்த கொடுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி கடன்கள்.
நிதி அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பேடுகள் பொருளாதார முன்னேற்றத்தை வேகமாக வெளிப்படுத்தினாலும், அரசின் அவசர கால நடவடிக்கைகள் மக்களின் கடைசி ரூபாயை கூட சுரண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாயைக் கூட ஈட்டாத திறமைமிக்க அரசு மக்களிடம் பிச்சை கேட்பது இனி வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகாரப்பூர்வமாக அரசியல் சாசனத்தில் இணைக்கப்படும் என்பது தான் எதிர்கால இந்தியா. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா அப்புறம் இன்னும் வரப்போகும் எல்லா கூந்தல் இந்தியா திட்டங்கள் தான்.
திட்டமிடுதலை திறமையாக செய்யும் பாரத பிரதமருக்கு என் கூந்தல் வாழ்த்துக்கள். வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களை விட்டு இந்தியா வேளியேறும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இருக்கட்டும். இந்தியாவின் நீதிமன்றங்களில் தீர்ப்பு எழுதப்படுவது மைகளினால் அல்ல. எப்போதோ இறந்த பேனாவில் ஊற்றப்பட்டிருக்கும் இரக்கமில்லா அரசியல் மட்டுமே.

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நடுநிசி இரவினில்

நடுநிசி இரவினில்


எப்படியும் இந்த நாளில் கடந்து விடும் உன் நினைவுகள்,
என்னை கடத்திச் செல்லாமல் தாமதிக்க காரணம் என்னவோ?
நடுநிசி இரவினில் என்னோடு சேர்ந்து நீ தேடிய தேடல்கள் தீர்ந்துபோனதாலா?
அதெப்படி முடியும் வரை ஆறாத தீயில் நோயாக விழுந்த நீ, 
முடிந்த பிறகு நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்?
தீயவை யாவினும் சிறந்த தீயை நீ தீர்த்திட செய்து என்னை இப்படி அத்தீயிலே எரிக்கச் செய்வது தான் காதலா?
கள்வனே! 
நடுநிசி இரவினில் நானும் இங்கே கண்ணீர் தீ கண்ணீர் தீ மூட்டி குளிர்காய!
ஏனோ எட்டிப் பார்க்கும் உன் நாபகங்கள் எல்லாம் என் உடலின் வழியே இன்பம் தேடிய வயதே! 

நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்

😢

மலர்வளையம்

3 Tips On Breaking Up With Someone You Still Love | BetterHelp

மலர்வளையம்

நீ எனக்கான உறவு இல்லை என ஒவ்வொரு முறையும் உணர்த்தும் போது,
என் நெஞ்சே என்னைக் கடந்து போகிறது

அன்பை நீ உதறிச் செல்ல காரணமாக நான் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்கே என் மீது அருவருப்பாக தோன்றுகிறது

இந்த நாள் இதை விட பெரிய இழப்பை எனக்கு அளித்திட முடியாது என்று நான் நினைத்தேன்

உண்மையில் இந்த நாளினும் இனிய நாளை நான் பெற்றிருக்க வாய்பில்லை என்று உன்னை கடந்த பின்பு தான் தெரிந்தேன்

உன் மார்போடு உறவாடிய இரவுகளில் என் மனதோடு பிசுபிசுத்துப் போன நம் காதலுக்கு தெரியாது அது அழுகிய ஆசையின் அர்த்தமற்ற அபத்தமென்று.

இந்நாளில் தெரிந்த உண்மை அந்நாளில் அறிந்திருந்தால் நான் இன்று விலைமதிக்க முடியாத கண்ணீரை உனக்காக சிந்தியிருக்க மாட்டேன்

நான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் வீணென்று என் கண்கள் காய்ந்த போது தான் அறிந்தேன்

பரவாயில்லை,
அன்பு மிகவும் மென்மையானது.
அதை உன் கரடுமுரடான இதயத்தில் வைத்தது என்னுடைய தவறு தான்

நிச்சயம் இதை நீ படிப்பாய்.
அப்போதேனும் தெரிந்துக்கொள்.
நீ என்னை பிரிந்த நொடிகளுக்கு ஒரு நொடி முன்பு நான் உன் காதலுக்கு மலர்வளையம் வைத்திருப்பேன் என்று 🤷🏻‍♂

நான் இருக்க மாட்டேனா

நான் இருக்க மாட்டேனா

உன்னை நான் வெறுக்க வேண்டுமென்றால்

ஓராயிரம் முறையாவது நான் சுக்குநூறாக உடைய வேண்டும்


ஒருமுறையாவது உன் நினைவுகளை என்னுள்ளே நிறுத்திட வேண்டும்

ஒருகணமேனும் உன் காதலை மறுத்திட வேண்டும்

இதெல்லாம் நடக்குமாயின் ஒரு நொடியேனும் என்னை கொன்றிட வேண்டும்

என்னை பிரிய வேண்டும் என்று முடிவானப்பின் எதற்கு பிரிவு என்கிற உறவு

கசப்பாகி போனது நான் மட்டுமல்ல நம் காதலும் தான்

நீ நடந்து போன பாதையை என் காதலால் துடைக்கின்ற துயரம் அறிவாயா?

என்றோ நீ விட்டுச்சென்ற ஆடையின் கசங்கிய வாசனைகள் என்னை கேட்கின்றன கூடல் இதற்காக தானா என்று

உன் குறுஞ்செய்தியால் விடிந்த என் காலை பொழுது கானாமல் போனதோ

காஃபியுடன் காத்திருந்த கைகள் கட்டப்பட்டதோ

உன் உயரங்களை தாண்டாத காலனிகள் முட்கள் ஆனதோ

சாலைப் பயணங்களில் வேகத்தடைகள் விடைபெற்றுக் கொண்டதோ

இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை 😏

உன்னால் என்னைப் பிரிந்து இருக்கமுடியுமானால் நான் இருக்க மாட்டேனா? மாறுகிறேன், மறக்கிறேன் மனம் திறக்கிறேன்

இதோ, எனக்கான காலை, காஃபி, காலணிகள், வேகத்தடைகள்

நானும் உனக்கு சொல்கிறேன்

சமூக சிக்கல்கள்

Capturing Voice of Customer (VOC) – Business Audit Compliance


சமூக சிக்கல்கள்

எனக்கான குரலை என்வாயிலாக எழுப்பினால் அது அடுத்தவருக்கு எப்படி இரைச்சலாகும்? எனக்கே தெரியாமல் என்மீது சுமத்தப்பட்ட ஒடுக்குமுறை வன்கொடுமைகளை என் கைப்பட நான் வரலாறு என்கிற பெயரில் எழுதுகிறேன்


உண்மையில் அது ஆபத்து அல்ல. அசிங்கமும் அல்ல. அறியாமை கூட இல்ல. அதை அறிய முற்படாத எண்ணம் மட்டுமே

கையெழுத்து மறைக்கப்படவில்லை மாறாக மறுக்கப்பட்டது. இது தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கலந்தோடும் கலாசாரம்

அவரவர் தேவை என்ன என்பதை கூட்டம் போட்டு கட்டமைத்து அடுக்குமாடிகளாக சமூக தேவைகளை முறன்களாக மாற்றியுள்ளோம். 
விளைவுகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு தள்ளிவிட்டு அதன் பயனாளியாக மட்டும் வாழ நினைக்கிறோம்

கருத்துக்களால் அழுகிய அத்தனை பெரிய இனத்தின் அடையாளம் தெரியாத சிலர் எதோ வந்தது வாழ்வதற்கே என்பது போல் ஓடுகிறார்கள்.
உங்கள் ஓட்டமும் அதற்கான நாட்டமும் உங்களுக்கு பொருந்தாதது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
மாற்றப்பட வேண்டியது சமூக சிக்கல்கள் இல்லை
சிக்கல்கள் உருவாக காரணமாக இருக்கும் வாய்ப்புகள் மட்டுமே

என்னைத் தீண்டு

Related image

என்னைத் தீண்டு

எதிர்பாராத இடத்தில் என்னைத் தீண்டு
எவ்வளவு இயலுமோ அவ்வளவு தழுவு
தீவீரத்தால் என்னை திணறச்செய்
வெப்பத்திற்கும் வேகத்திற்கும் கடமையாற்று

உடலுக்கும் உடமைக்கும் பரிவுயில்லை என்பதை முழுதாக்கு
என் முந்தானை மோகத்தை வெளியேற்று

நான் கொண்ட கள்வனே

தொடர்பற்ற நேரம்

Blocked My Number | How many times does the phone ring when ...


தொடர்பற்ற நேரம்

தொடுதிரையை திறந்து தினமும் திகைத்து போகிறேன்.

நீ இயங்கலையில் இல்லாததால் இதயம் நோகிறேன். குறுஞ்செய்தி கொண்டென் உள்ளம் கொய்வாயா.?
இல்லை குறட்பதிவின் வாயிலாக கொஞ்சி செல்வாயா.? கைப்பேசியில் உரையாட நாவும் துடிக்க
காரணமே இல்லாது நாணம் தடுக்க
முகநூலும் பகிரியும் என் தோழியாகி
முயல்கிறதே பசலை தீர்க்க யாதுமாகி

தொடர்பற்றதாய் உணர்கின்ற நேரம் யாவும்
தொடர்கிறது கற்பனையாய் நம் காதற்கோலம்.
அலைக்கற்றையின் சைகைகள் நமைபிரிக்க
அடுக்குமோ என் தலைவா
நம் அன்பை அடைக்க.

கவனமாக இரு


கவனமாக இரு

பெண்ணே!!

கழிப்பறையில்
கவனம்...!
குளியறையில்
கவனம்...!
படுக்கையறையில்
கவனம்...!
பள்ளியறையில்
கவனம்...!
அலுவலகறையில்
கவனம்...!
கோவில் கருவறையில்
கவனம்...!
பேருந்து பயணத்தில்
கவனம்...!
இரயில் பயணத்தில்
கவனம்...!
பாலூட்டும் அறையில்
கவனம்...!
மருத்துவறையிலும்
கவனம்...!
ஆடை மாற்றும் அறையிலும்
கவனம்...!
நீ
பெண் என்று தெரிந்து கொண்டால்
தாயின் கருவறையிலும்
கவனமாக இரு,
பெண்ணே நீ
கடந்து போகும்
பாதையை
கவனிப்பாயா...?
சில
காம வெறிநாய்களின்
கண்களை
கண்காணித்து கொண்டு
இருப்பாயா...?
பெண்ணின் கவனத்திற்கான
பதிவு இல்லை...!

ஒரு ஆணாக இருப்பதின்
அவமானத்திற்க்கான பதிவு...!

நீ என்னை நினைக்கவில்லை

The bus ride | Nomadic Sahil


நீ என்னை நினைக்கவில்லை

பயணங்களின் இடையில் கிசுகிசுவென பசிக்கும் அவளின் நினைவுகளுக்கு, பசியார என் வார்த்தைகளை உணவாக்கிக்கொள்கிறாள். ஆசைதீர என் வார்த்தைகளோடு சேர்த்து என்னையும் தின்றாள்... ஆனால் ஏனோ இடைவெளியை விட மறுத்துவிட்டாள்... 

இடையிடையே சினுங்கிய அவளின் உடையை படையெடுக்க ஏகாந்த எண்ணம் எனக்கில்லை ... அதனால் எழுந்த எண்ணத்தை உதறவும் மனமில்லை...

உன் கொடியிடையில் விழுந்த நான் விருந்துன்ன முந்தியை பந்தியாக்கு... ஆனால் நான் மட்டுமே நீ விருந்தளிப்பதை பார்க்க தரவேண்டும் நல்வாக்கு...

உன் கண்களை நான் அருகே இருந்தபோது கண்டதில்லை விழியீர்ப்பினால் சிதைந்த இடம் என் இதயமாக மட்டுமே இருக்கும் என்று.

ஆனால்

உன் சுந்தர விழியை காணமல் வாடி வதைபடும் என் ஊமை கண்களுக்கு எப்படி சொல்வேன் நீ என்னை நினைக்கவில்லை??? என்று

எழுதிய மை காய்வதற்குள் என்னை கட்டி அனைக்க வா என் விழியே...

உதிர்த்து விட்டு போ!

10 Make-up Tips for Girls with Eyeglasses


உதிர்த்து விட்டு போ!

உன்னை காணும் போது தோன்றிய ஊடலில் நான் உதிர்ந்து தான் போனேன்.. மறுக்கவில்லை, ஆனால் உன் ஊடலில் உருகாத எந்தன் மனம் உந்தன் நிறைந்த காதலின் நேர்த்தியில் களைந்துபோனது ஏனடி??? புயலால் பாதிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கும் என்று அறிவேன். ஆனால் உன் விழியீர்ப்பினால் சிதைந்த இடம் நானாக மட்டுமே இருப்பேன்.

இன்பத்தை ஊற்றாக்கி இதழில் ஆர்ப்பரித்து பார்வையால் கோரத்தாண்டவம் போட உன்னால் மட்டுமே முடியும். வதைபடுவதை அனுபவிக்க யாசகனாய் நிற்கிறேன். ஏனென்று கேட்காமல் யாவென்று அறியாமல் அற்ப ஜீவிதன் போல உன் ஒற்றை பார்வைக்காக 

காத்திருக்கும் என்னை ஒருகணம் திரும்பி பாரடி கள்ளி... பரிதவிக்கும் எந்தன் உள்ளம் பசியார உந்தன் விழியை கொஞ்சம் உதிர்த்து விட்டு போ...

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

முதல் துளியின் சூடான முத்தம்

Drop Of Love Heart - DesiComments.com


முதல் துளியின் சூடான முத்தம்

கார்மேக மேனியில் தேன் போல ஒழுகி விழும் ஏகாந்த மழையில் முதல் துளியை தேடிப் பிடித்து மூச்சு முட்ட முத்தமிட வேண்டும்

சத்தமிடும் மணல் துகள்களின் இடையே நான் நின்று போக வேண்டும். மொத்தமாய் நான் உன்னில் கரைந்த பின்பு பிரபஞ்ச அழகும் உடைந்து போக வேண்டும்.
முதல் துளியை நான் முத்தமிட்டு முத்தமிட்டு முத்தாக்க வேண்டும். முடிவில் பித்தம் தெளிந்து சித்தம் துளிர நீ மீண்டும் மழையாக வேண்டும்.
மழையென நீ அதை நனைத்திட நான்.
😍

உலகின் அழகெங்கும் நான்

Stay safe and well | Save the California Delta Alliance (STCDA)

உலகின் அழகெங்கும் நான்
வலிகளும் வேதனைகளும் வாழ்க்கையை செதுக்குமாயின், வாழ்வின் பேரழகு சிலையாக நான் இருப்பேன். என்னை நீர்திடாத செயல்களுக்கு மெருகூட்டி வர்ணம் கூட்டுவேன். 🌈
என்னை வியக்க வைக்கும் சில நிபந்தனைகளுக்கு நான் மௌனமாவேன். என்னை விழுங்க நினைக்கும் பல விதிகளுக்கு நான் இரைச்சலாவேன். எனக்கான தனிமையில் உலவும் என்னில் ஓராயிரம் அர்த்தங்களோடு புதுமையான கோட்பாடுகளை நிறுவுகிறேன். அவற்றின் பழமையான கருத்துக்களை அடித்தளம் போட்டு என்னோடு சேர்ந்து நானே உயரமாகிறேன்.
ஒருவேளை, யார் வேண்டுமானாலும் யாராகவும் ஆகலாம். ஆனால் எவரும் நான் ஆக முடியாது. வினவும் வினாக்களில் விடையென ஒளிந்து கொண்டு வெளியேறும் சர்ச்சைகள் அல்ல நான். விதைகளை விதைத்து கொண்டு அடுத்தவரின் கையில் அறுவடையை ஒப்படைக்கும் சங்கமம் நான்
நான் நானில்லை. நான் நானும் இல்லை. நான் நானே இல்லை. நானற்ற நானாக நான்.

உலகின் அழகெங்கும் நான்

காதல் தொலைநோக்கியில் நீ

Telescopes: Seeing Stars | Britannica


காதல் தொலைநோக்கியில் நீ

வானம் எப்படி பிரபஞ்ச ரகசியங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறதோ, அதைப் போலவே நீயும் சிலவற்றை ரகசியமாகவே வைத்திருக்கிறாய். என்றேனும் ஒருநாள் என் காதல்-தொலைநோக்கியில் நீ முழு காட்சியாக மாறப்போகிறாய். என்னை நினைக்க தூண்டிய இரவுகளுக்கு உன் இரகசியங்களை விளக்கத்தான் போகிறேன்.
வேகம் கூடி நிறை இழந்து நீயாகவே நான் பயணிக்கிறேன். பயணம் முடிவதாக தெரியவில்லை. நானும் உன்னை விலகுவதாக இல்லை. இடையிடையே சில இடைவெளிகள்.

இடைவெளிக்கும் இடைவெளி இல்லை
😊

சமூக விதைகள்

No photo description available.


சமூக விதைகள்

இந்த சமூகத்தின் ஒற்றை வடத்தை எப்படியாவது இழுத்து கட்டிவிட வேண்டும் என்று எத்தனையோ விடயங்களை கடந்தாயிற்று. இதுவும் கடந்து போகும் என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டே மறக்கவும் பழகியாயிற்று. மனதின் ஓரத்தில் ஓயாமல் முற்றுகை இடும் கவலைகளையும் சமாதானப்படுத்தி முடித்தாயிற்று.

ஒன்றை மட்டும் விட்டுவிட்டேன்! நான் அமர்ந்து பேசிப்பேசி பழகிய பெரும்பாண்மை யாவும் சிறுமை கண்டு விலகுவதை கவனிக்க மறந்தேன். சற்று அமர்ந்தேன். சிந்திக்கலானேன். மனம் மாறியது. சாடல் ஒழிந்து தேடல் தொடங்கியது.
கருப்பு வெள்ளை காகிதத்தில் கலர் கனவுகள் போல தவறாமல் வருகிறது மனதின் சஞ்சலங்கள். பிறந்த போது அழுததை விட பிறருக்காக அழுவது வழக்கமாகிவிட்டது
மற்றவர்களைப் போலவே நானும் விரலுக்கு மையிட்டு மையிட்டு காத்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் சிறிய திருத்தம். நான் காத்துக் கொள்ளும் அளவிற்கு சமூக அமைப்பு இல்லை என்பதை மட்டும் நினைக்க தவறுகிறேன். பெருமை பேசிய இனம் தானே நாம். சாதிய ஒடுக்குமுறையை கையிலெடுத்த இனம் தானே நாம். பேசுவோமா?
சாலை வழியே ஹிந்தி, கல்வி வழியே ஆங்கிலம், இசை வழியே கன்னடம், கடவுள் வழியே சமஸ்கிருதம் என நம்மை நாமே தொலைத்துவிட்டு திரிகிறோமோ?.
மதமில்லா கடவுள், சாதியில்லா சமூகம் என்பதெல்லாம் வெறும் கனவாகுமோ?. போதும்! நான் மட்டுமே புலம்பி என்ன ஆக போகிறது? பிறகு ஈழம் போல புலம்பெயர்ந்து வாழ்வதற்கு ஆயத்தமாக வேண்டும். கல்தோன்றா மண்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி, நெஞ்சில் பாரங்களை சுமப்பது விதியின் சதியோ?

🙁

மனசாட்சி

Manasatchi - Page 06 - Page 6


மனசாட்சி

என்மேல் படியும் அத்தனை அழுக்குகளும் எங்கோ யாரோ ஆடையாக உடுத்தி கழற்றியதே. எவ்வளவு தான் நானும் தாங்குவேன்?

உங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும் அத்தனை குப்பைகளை கொட்டும் குப்பைத் தொட்டியா நான்? என்னை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? நான் உங்கள் நிழலாகவே வாழ்ந்தாலும், நான் நீங்களாக முடியுமா?
உங்களால் தான் நான் உருவாக்கப்பட்டேன் என்பதற்காக என்னை அடிமையாக்க முனைவது முறைமையா? எனக்கென்று செயல்படும் தனிப்பட்ட உலகம் உங்களுக்கு பிரச்சினையா?
என்னையும் கொஞ்சம் சுதந்திரத்தை அனுபவிக்க விடு. நீங்கள் வகுத்த முரண்பாடுகள் என்னை உலுக்கவில்லை, எந்த முரண்பாடுகளையும் நான் தாங்கிடுவேன் என எனது விடுதலையை கைது செய்யும் போது தான், உங்கள் வக்கிரத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய ஆயத்தமாகிறேன்
-இப்படிக்கு #மனசாட்சி

வழியெங்கும் புத்தகங்கள்

When Was the Bible Written? Complete History of Old and New Testament


வழியெங்கும் புத்தகங்கள்

வழிபாடுகள் ஆக்ரோஷமாக ஓடுகையில் வழிப்போக்கன் நடந்து போகிறான். நடைபாதை வழியெங்கும் புத்தகங்கள்!

வழிபாட்டை நிறுத்திவிட்டு புத்தகம் வாசித்துவிட, தொழுகையை கைவிட்டு பின்னோக்கி நடக்கலானான் (படித்த புத்தகம்: கடவுளை அடையும் எளிய வழி)
முயற்சி விடைபெறுகிறது! மூடநம்பிக்கை வீரியத்தை கூட்டுகிறது!
🤷🏻‍♂

வெளிச்சமெங்கும் உன் முகம்

Image may contain: 1 person, sitting and outdoor


வெளிச்சமெங்கும் உன் முகம்

ஒரு எஜமானியின் மனப் புத்தகத்திலிருந்த ஒருபக்கம்

வெளிப்படுத்திடவே முடியாமல் இந்த குறுநகையை இத்தனை நாளாய் மறைத்து வைத்திருந்தாயோ!
அதெப்படி, கறைபடிந்த முகத்திற்கு பின்னால் குறையாத இளநகையை தவணையில் செலுத்துகிறாய்!
ஓயாமல் தேயும் பாத்திரங்களில் உன் புன்னகையை இறக்கிவைத்துவிட்டாயா! இல்லை சலவை இயந்திரத்தில் விழுந்த துணிகளைப் போல அதையும் சேர்த்து வெளியேற்றிவிட்டாயா!
நீதானா!
எத்தனை பேர் சத்தம் போட்டாலும் அத்தனை பேருக்கும் பதிலளிக்கும் திறமையை நான் உன்னிடம் கற்றுக் கொள்கிறேன்
ஓய்வின்றி உழைக்கும் நீ ஓய்வூதியம் கேட்காததை எண்ணி உள்ளம் குளிருகிறேன்
மிச்ச மீதியில் கூட இன்பங்களை அனுபவிக்க முடியும் என்று மறுக்காமல் பழகுகிறேன்
இதற்கெல்லாம் காரணம் நீயே!
தூரத்தில் இருக்கும் தாயை நேரில் காட்டும் உனக்கு வருடத்தின் ஒரு நாள்தான் மகிழ்ச்சி என்று தீபாவளி ஆணையிட்டிருந்தால், உன் குறுநகை கண்டு தடைஉத்தரவு பிறப்பிக்கட்டும்
நான் எஜமானி நீ வேலைக்காரி என்பது சமூக சிக்கல்களில் ஒன்றாகளாம். ஆனால் நீ என்றும் என் தாய்க்கு நிகரானவர் தான் (லட்சுமி)
போ! இந்த சேலையால் தீபாவளியின் வெளிச்சமெங்கும் உன் முகம் மிளிரட்டும்!

காலை காஃபி

Drinking coffee before bed does not affect sleep quality, study ...


காலை காஃபி

அடர்த்தியான காரிருள் மெல்ல மெல்ல ஒளிபரவிய இடத்தை ஆட்கொள்ளும் போது, எங்கோ புதைக்கப்பட்ட கோபமும் வக்ரமும் இழப்பும் ஏமாற்றமும் சுதந்திரத்தை வரவேற்கும்

இத்தனை கொடூரங்களை தன்னிடத்தே அடைத்து வைத்து விட்டு எதையுமே அறியாத குழந்தை போல தவழும் சிரிப்பில் சில நிபந்தனைகளையும் நம்மிடம் முன்வைக்கிறது.
இதில் முரண்பாடுகள் இல்லை! முரண்களின் தாகம் இதுவாக இருக்கலாம்.
விதிமுறை எதிரொலி செய்தால் எச்சரிக்கை என்ன வேடிக்கையா பார்க்கும். உச்சரிப்புகள் கூட கட்டளை ஆக நச்சரித்து போகும் மிச்சமாகும் சச்சரவுகள்.
பரவாயில்லை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அவ்விருள் நம்ம முழுமையாக முழுங்கியிருக்கும்.
கட்டமைப்பு எல்லாம் தகவமைத்துக் கொண்ட நச்சுக்களின் கூட்டமா? ஒருவேளை நச்சுகள் தான் கட்டமைப்பின் அடிப்படையா?
காலை காஃபி முதல் இரவு தூக்கம் வரை எல்லைப்படுத்திய பதற்றங்கள் எல்லாம் ஊடுருவும் ஊடகம் போல மாறுகிறது.
இன்னும் காஃபி தீர்ந்திடவில்லை. ஆனால் அடுத்த நாளின் தூக்கம் நம்மை பதற வைக்கும்.
இன்னும் தீராத தாகத்தில் காரிருள் இருக்கலாம்!

காதல் கடிகாரங்கள்

Amazon.com: Creative Love Gift Wall Clock Free Combination Of ...


காதல் கடிகாரங்கள்

கைக் கடிகாரத்தை உற்று நோக்கினால் இப்போது தான் எதோ காலம் நகர்வது போன்ற பிரமை என்னுள் எழுகிறது

ஒரு நொடி அடுத்த நொடியை கடப்பதற்குள் இந்த பிரபஞ்சத்தில் பல காதல் கடிகாரங்கள் மெதுவாய் நடக்க பழகியிருக்கும். இந்த இடைவெளியில் நமது சிறகுகள் விரிந்திருக்கும்.
நம்மை பார்த்த ஏகாந்த மயக்கத்தில் காலம் நகர்வதை மறந்திருக்கும். இனி கடிகார முள்களின் சத்தம் கேட்காமல் நம் முத்தச் சத்தம் ஓயாமல் ஒலிக்கும்

உடைந்து போவதற்கு முன்

உடைந்து போவதற்கு முன்

இன்னும் எத்தனை இரவுகளை விழுங்கிவிட போகிறதோ உந்தன் நினைவுகள்

என் இரவுகள் நான் இல்லாமல் நகர்கின்றன. தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல அதை நான் எட்டி எட்டிப் பார்க்கிறேன். புகைத்துக் கொண்டிருக்கும் நினைவுகளுக்கு எண்ணெய் ஊற்றுவது போல வந்து போகின்றன மௌனமான வலிகள்.
தனிமையில் போராடுகிறேன். என்னை இழப்பேனோ இல்லை உன்னை மறப்பேனோ. எதுவானாலும் அதில் நான் உடைந்து போவது நிச்சயம்!
🙁
உடைந்து போவதற்கு முன் நான்

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...