சமூக சிக்கல்கள்
எனக்கான குரலை என்வாயிலாக எழுப்பினால் அது அடுத்தவருக்கு எப்படி இரைச்சலாகும்? எனக்கே தெரியாமல் என்மீது சுமத்தப்பட்ட ஒடுக்குமுறை வன்கொடுமைகளை என் கைப்பட நான் வரலாறு என்கிற பெயரில் எழுதுகிறேன்
உண்மையில் அது ஆபத்து அல்ல. அசிங்கமும் அல்ல. அறியாமை கூட இல்ல. அதை அறிய முற்படாத எண்ணம் மட்டுமே
கையெழுத்து மறைக்கப்படவில்லை மாறாக மறுக்கப்பட்டது. இது தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கலந்தோடும் கலாசாரம்
அவரவர் தேவை என்ன என்பதை கூட்டம் போட்டு கட்டமைத்து அடுக்குமாடிகளாக சமூக தேவைகளை முறன்களாக மாற்றியுள்ளோம்.
விளைவுகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு தள்ளிவிட்டு அதன் பயனாளியாக மட்டும் வாழ நினைக்கிறோம்
கருத்துக்களால் அழுகிய அத்தனை பெரிய இனத்தின் அடையாளம் தெரியாத சிலர் எதோ வந்தது வாழ்வதற்கே என்பது போல் ஓடுகிறார்கள்.
கருத்துக்களால் அழுகிய அத்தனை பெரிய இனத்தின் அடையாளம் தெரியாத சிலர் எதோ வந்தது வாழ்வதற்கே என்பது போல் ஓடுகிறார்கள்.
உங்கள் ஓட்டமும் அதற்கான நாட்டமும் உங்களுக்கு பொருந்தாதது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
மாற்றப்பட வேண்டியது சமூக சிக்கல்கள் இல்லை
சிக்கல்கள் உருவாக காரணமாக இருக்கும் வாய்ப்புகள் மட்டுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக