திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மஞ்சளில் இறை

In broad daylight, manual scavengers dip deep into sewage-filled ...


மஞ்சளில் இறை

அருவருக்கத்தான் செய்கிறது?

நம்மை போன்ற உயர்ந்த மனம் கொண்டவர்களை கண்டால் அருவருக்கத்தான் தான் செய்கிறது

இதென்ன தேசம்?
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த 5000 கோடியில் செலவு செய்து அதிவேக இணைய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி என்னத்த சாதிக்க போறீங்க?

இது தான் தொழில்நுட்பமா?
இதற்கு தான் படித்து பட்டம் பெற்ற விஞ்ஞானிகளா? 
சௌசம் இல்லாமல் சிறுநீர் பெய்து தம் மலத்தில் தாமே புரண்டு திரியும் பன்றிகள் கூட மனிதனை விட உயர்ந்தது என நான் கருதுகிறேன்

போட்டி போடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவதில்லை
பொதுவுடமை பேசும் அரசியல் கட்சிகள் குறிப்பிடுவதில்லை
அரசு மட்டும் கவனத்தில் வைக்கிறது? இவர்கள் இதற்காக தான் என்று
அவர்கள் மீது ஒரு கடுமையான காழ்புணர்ச்சி பார்வையாக மாறுகிறது.
அதற்கென ஒரு இனத்தையே உருவாக்கி அவர்களை தேசத்தின் கொடிய நோயான தீண்டாமையில் வாழ வைத்திருக்கிறார்கள் இந்த சமூக மலங்கள்

என்றாவது நீ தொட்டதுண்டா?
இல்லை வேண்டாம், அதை சிறிது நேரம் பார்க்க முடியுமா? 
அப்புறம் எப்படி அதற்கு ஒரு சமூகத்தை தேடுகிறார்கள்?
ரிசர்வேஷனு வாய்கிழிய பேசும் சாதிக் கட்சிகளின் இளைஞர்களே இந்த வேலைக்கு உங்களின் சாதிவிழுக்காடு அதிகரித்தால் வேலைக்கு சேர்வீர்களா?
இது தான் அரசியலமைப்புச் சட்டத்தின் வீரியமோ?
இதற்கு தான் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படுகிறதோ?
உயிருக்கு ஆபத்தான ஒன்றை விருப்பம் இல்லாமல் தேசம் திணித்ததன் காரணமாக இயங்கும் இவர்களுக்கு உங்களின் உயர்ந்த விருதுகள் இணையாகுமா? 

மற்றவர்களை கைதட்டி வரவேற்க்கும் நாம் தான் இவர்களை மூக்கை மூடுக்கொண்டு அழைக்கிறோம்
மலங்களை விட மனிதர்கள் உயர்வதே இல்லை. இதை அள்ளுவதால் அவர்கள் தாழ்வதும் இல்லை

மலத்தின் கூடாரம் இவர்கள் என்றால் படைத்த இறை இவர்களின் மஞ்சளில் நீராடி படைத்த பாவத்தை போக்கிக்கொள்ளட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...