திங்கள், 10 ஆகஸ்ட், 2020

தொடர்பற்ற நேரம்

Blocked My Number | How many times does the phone ring when ...


தொடர்பற்ற நேரம்

தொடுதிரையை திறந்து தினமும் திகைத்து போகிறேன்.

நீ இயங்கலையில் இல்லாததால் இதயம் நோகிறேன். குறுஞ்செய்தி கொண்டென் உள்ளம் கொய்வாயா.?
இல்லை குறட்பதிவின் வாயிலாக கொஞ்சி செல்வாயா.? கைப்பேசியில் உரையாட நாவும் துடிக்க
காரணமே இல்லாது நாணம் தடுக்க
முகநூலும் பகிரியும் என் தோழியாகி
முயல்கிறதே பசலை தீர்க்க யாதுமாகி

தொடர்பற்றதாய் உணர்கின்ற நேரம் யாவும்
தொடர்கிறது கற்பனையாய் நம் காதற்கோலம்.
அலைக்கற்றையின் சைகைகள் நமைபிரிக்க
அடுக்குமோ என் தலைவா
நம் அன்பை அடைக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...