மதங்கள்
தேவை அளிப்பை நோக்கியது
ஆசைகளை உள்ளடக்கியது
ஆசைகள் திணறல்களின் தெளிவு
தெளிவோ தீர்க்கமான சிந்தனை
சிந்தனையோ வாக்கின் இனிமை
வாக்கோ வளத்தின் அடையாளம்
அடையாளம் மனதின் எழுகைஎழுகை தூண்டுதலின் தொடக்கம்
இந்த தொடக்கம் தான் அடிப்படை
அடிப்படையே திரிந்த தேவையாக இருக்கிறது
அப்படியென்றால் எதுவும் இங்கு தனித்து இயங்கவில்லை. இது ஒட்டுமொத்த கூட்டுமுயற்சி
முறன்களின் தொகுப்பாக இந்த இயற்கையே இருக்கையில் நடைமுறை முறன்கள் இயல்புதான்
இதை மறுக்கமுடியுமா? இன்று ஏதோ ஒரு வெற்றிடம் நம்மை சூழ்ந்து அதற்கான விலையாக நம்முடைய நேரத்தை கொடுக்கிறோமே அது தான் முறன்களாக மாறுகிறது
அடிப்படைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியாத அனுகுமுறை தான் அவசரமாக அநீதியை ஆங்காங்கே நிகழ்த்துகிறது
ஏன்? நாம் புத்தனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்ச மனிதத்தன்மையை வெளிப்படுத்த பயம் கொள்கிறோமே! எதற்காக?
சித்தாந்தங்கள் வாசித்த நம்முடைய மனுகுலம் மனித உரிமைகளை அடக்கி ஆளுகையில், அந்த சட்டத்தை உடைப்பதில் என்ன தவறு? முகத்திரையில் ஒளிந்து கொண்டு முற்போக்கு சிந்தனை என்கிற பெயரில் பழைய அனுகுமுறையை பிற்போக்காக கருத்தியல் ரீதியாக திணிப்பது எவ்வளவு பெரிய வஞ்ச மனப்பான்மை
இங்கு குற்றங்கள் பிறக்கப்படுவதில்லை
உருவாக்கப்படுகின்றன
இந்த சமூகத்தில் பெரும்பாலான உரிமைகள் வேண்டுமென்றே ஆழமாக புதைக்கப்படுகிறது
அதற்கு பின்னால் உள்ள அத்தனை பேரின் முகங்களின் உண்மையை அலசுவீர்களேயானால் அவர்கள் மத உணர்வோடு அலையும் வெறியர்கள்
மதங்கள் தவறுகளை ஒருபோதும் செய்வதில்லை
இந்த மதங்களை நிர்வகிக்கும் மத தலைவர்கள் மட்டுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக