ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

மனசாட்சி

Manasatchi - Page 06 - Page 6


மனசாட்சி

என்மேல் படியும் அத்தனை அழுக்குகளும் எங்கோ யாரோ ஆடையாக உடுத்தி கழற்றியதே. எவ்வளவு தான் நானும் தாங்குவேன்?

உங்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும் அத்தனை குப்பைகளை கொட்டும் குப்பைத் தொட்டியா நான்? என்னை பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டா? நான் உங்கள் நிழலாகவே வாழ்ந்தாலும், நான் நீங்களாக முடியுமா?
உங்களால் தான் நான் உருவாக்கப்பட்டேன் என்பதற்காக என்னை அடிமையாக்க முனைவது முறைமையா? எனக்கென்று செயல்படும் தனிப்பட்ட உலகம் உங்களுக்கு பிரச்சினையா?
என்னையும் கொஞ்சம் சுதந்திரத்தை அனுபவிக்க விடு. நீங்கள் வகுத்த முரண்பாடுகள் என்னை உலுக்கவில்லை, எந்த முரண்பாடுகளையும் நான் தாங்கிடுவேன் என எனது விடுதலையை கைது செய்யும் போது தான், உங்கள் வக்கிரத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய ஆயத்தமாகிறேன்
-இப்படிக்கு #மனசாட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...