ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

காலை காஃபி

Drinking coffee before bed does not affect sleep quality, study ...


காலை காஃபி

அடர்த்தியான காரிருள் மெல்ல மெல்ல ஒளிபரவிய இடத்தை ஆட்கொள்ளும் போது, எங்கோ புதைக்கப்பட்ட கோபமும் வக்ரமும் இழப்பும் ஏமாற்றமும் சுதந்திரத்தை வரவேற்கும்

இத்தனை கொடூரங்களை தன்னிடத்தே அடைத்து வைத்து விட்டு எதையுமே அறியாத குழந்தை போல தவழும் சிரிப்பில் சில நிபந்தனைகளையும் நம்மிடம் முன்வைக்கிறது.
இதில் முரண்பாடுகள் இல்லை! முரண்களின் தாகம் இதுவாக இருக்கலாம்.
விதிமுறை எதிரொலி செய்தால் எச்சரிக்கை என்ன வேடிக்கையா பார்க்கும். உச்சரிப்புகள் கூட கட்டளை ஆக நச்சரித்து போகும் மிச்சமாகும் சச்சரவுகள்.
பரவாயில்லை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அவ்விருள் நம்ம முழுமையாக முழுங்கியிருக்கும்.
கட்டமைப்பு எல்லாம் தகவமைத்துக் கொண்ட நச்சுக்களின் கூட்டமா? ஒருவேளை நச்சுகள் தான் கட்டமைப்பின் அடிப்படையா?
காலை காஃபி முதல் இரவு தூக்கம் வரை எல்லைப்படுத்திய பதற்றங்கள் எல்லாம் ஊடுருவும் ஊடகம் போல மாறுகிறது.
இன்னும் காஃபி தீர்ந்திடவில்லை. ஆனால் அடுத்த நாளின் தூக்கம் நம்மை பதற வைக்கும்.
இன்னும் தீராத தாகத்தில் காரிருள் இருக்கலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...