வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இரக்கமில்லா இந்திய அரசியல்

இரக்கமில்லா இந்திய அரசியல்

இங்கே இறை காப்பாற்றும் என நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் தள்ளாடும் ஒவ்வொரு பிரஜையின் மிகச்சிறிய ஆசை, வீடு போய் சேரமுடியாதா என்பது தான்.
அரசின் கொள்கையில் நீதிமன்றங்களுக்கு வேலையில்லை என தீர்ப்பெழுதும் நடுநிலை தராசில் முள் இல்லாதது வழக்கத்திற்கு மாறானதாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குவதால் மேம்படும் என்பது பழக்கப்பட்ட ஒன்றானாலும் 20 லட்சம் கோடியில் உருவாக்கப்படும் உயர்தர துணுக்குகள் வேதனையான உண்மை.
எனக்கு அரசின் கொள்கையில் எதிலும் உடன்பாடு இல்லை என்றாலும் சிலவற்றில் அழுத்தமாக உண்டு.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் மீதான கடுமையான அக்கரை உள்நாட்டு மக்களின் மீது இல்லாததின் பின்னால் உள்ள அரசியல் நோக்கத்தை பாராட்டியாக வேண்டும்.
மது பிரியர்களை கொண்டாடும் மாநிலங்களில் மனித உயிர்கள் பற்றிய கவலைகள் சிறிதும் இல்லாமல் அமல்படுத்தப்படும் உயர்ந்த அவசர சட்டங்களை மனதார பாராட்டிட வேண்டும்.
இதைவிட இன்னொரு அபூர்வமான செய்தி என்னவென்றால், கோடிக்கணக்கான மக்களின் கூந்தல் பராமரிப்பு. மக்களின் கூந்தலை பராமரிக்க செலவழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொண்டைக் கடலை மதிப்பு மிக்க இந்திய வருவாய்கள் தான்.
கஞ்சிக்கு வழியில்லாமல் மக்கள் போராடும் போதும் அவர்களின் தொழில்களை மேம்படுத்த கொடுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி கடன்கள்.
நிதி அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பேடுகள் பொருளாதார முன்னேற்றத்தை வேகமாக வெளிப்படுத்தினாலும், அரசின் அவசர கால நடவடிக்கைகள் மக்களின் கடைசி ரூபாயை கூட சுரண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாயைக் கூட ஈட்டாத திறமைமிக்க அரசு மக்களிடம் பிச்சை கேட்பது இனி வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகாரப்பூர்வமாக அரசியல் சாசனத்தில் இணைக்கப்படும் என்பது தான் எதிர்கால இந்தியா. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா அப்புறம் இன்னும் வரப்போகும் எல்லா கூந்தல் இந்தியா திட்டங்கள் தான்.
திட்டமிடுதலை திறமையாக செய்யும் பாரத பிரதமருக்கு என் கூந்தல் வாழ்த்துக்கள். வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களை விட்டு இந்தியா வேளியேறும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இருக்கட்டும். இந்தியாவின் நீதிமன்றங்களில் தீர்ப்பு எழுதப்படுவது மைகளினால் அல்ல. எப்போதோ இறந்த பேனாவில் ஊற்றப்பட்டிருக்கும் இரக்கமில்லா அரசியல் மட்டுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...