திங்கள், 10 ஆகஸ்ட், 2020

நடுநிசி இரவினில்

நடுநிசி இரவினில்


எப்படியும் இந்த நாளில் கடந்து விடும் உன் நினைவுகள்,
என்னை கடத்திச் செல்லாமல் தாமதிக்க காரணம் என்னவோ?
நடுநிசி இரவினில் என்னோடு சேர்ந்து நீ தேடிய தேடல்கள் தீர்ந்துபோனதாலா?
அதெப்படி முடியும் வரை ஆறாத தீயில் நோயாக விழுந்த நீ, 
முடிந்த பிறகு நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்?
தீயவை யாவினும் சிறந்த தீயை நீ தீர்த்திட செய்து என்னை இப்படி அத்தீயிலே எரிக்கச் செய்வது தான் காதலா?
கள்வனே! 
நடுநிசி இரவினில் நானும் இங்கே கண்ணீர் தீ கண்ணீர் தீ மூட்டி குளிர்காய!
ஏனோ எட்டிப் பார்க்கும் உன் நாபகங்கள் எல்லாம் என் உடலின் வழியே இன்பம் தேடிய வயதே! 

நோயாக இருந்து ஆறாமல் வலி தருகிறாய்

😢

மலர்வளையம்

3 Tips On Breaking Up With Someone You Still Love | BetterHelp

மலர்வளையம்

நீ எனக்கான உறவு இல்லை என ஒவ்வொரு முறையும் உணர்த்தும் போது,
என் நெஞ்சே என்னைக் கடந்து போகிறது

அன்பை நீ உதறிச் செல்ல காரணமாக நான் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்கே என் மீது அருவருப்பாக தோன்றுகிறது

இந்த நாள் இதை விட பெரிய இழப்பை எனக்கு அளித்திட முடியாது என்று நான் நினைத்தேன்

உண்மையில் இந்த நாளினும் இனிய நாளை நான் பெற்றிருக்க வாய்பில்லை என்று உன்னை கடந்த பின்பு தான் தெரிந்தேன்

உன் மார்போடு உறவாடிய இரவுகளில் என் மனதோடு பிசுபிசுத்துப் போன நம் காதலுக்கு தெரியாது அது அழுகிய ஆசையின் அர்த்தமற்ற அபத்தமென்று.

இந்நாளில் தெரிந்த உண்மை அந்நாளில் அறிந்திருந்தால் நான் இன்று விலைமதிக்க முடியாத கண்ணீரை உனக்காக சிந்தியிருக்க மாட்டேன்

நான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரும் வீணென்று என் கண்கள் காய்ந்த போது தான் அறிந்தேன்

பரவாயில்லை,
அன்பு மிகவும் மென்மையானது.
அதை உன் கரடுமுரடான இதயத்தில் வைத்தது என்னுடைய தவறு தான்

நிச்சயம் இதை நீ படிப்பாய்.
அப்போதேனும் தெரிந்துக்கொள்.
நீ என்னை பிரிந்த நொடிகளுக்கு ஒரு நொடி முன்பு நான் உன் காதலுக்கு மலர்வளையம் வைத்திருப்பேன் என்று 🤷🏻‍♂

என்ன வரையறை இது

Period Pain Treatment


என்ன வரையறை இது

இது என்ன வரையறை இது என் உரிமை

எளிதில் கடந்து விடக் கூடிய வலி இல்லை இது. ஆனால் அந்த வலிகளை விட நடமாடும் அது குறித்த வரையறைகள் தான் அதிகம் வலிகளை உண்டாக்கும்

ஊரறிந்து உணவிட்டு பலநாட்கள் பொத்தி பொத்தி வைத்த கலனொன்று திடிரென கழன்று விழுகையில் யாதொன்றும் அறியாமல் தான் நின்றேன்

பிறந்த வலியினும் கொடிய வலி இதை யாருமே அறியாத போது தான் ஏற்படுகிறது. அறியாமை கூட அறிந்திட வாய்ப்பு உள்ளது. அதை அறிமுகப்படுத்திய எவரும் அறிகிலை. தவறு என்னுடையதா? விழுந்து சரிந்து பின் எழுந்து நிமிர்ந்தது அன்றொரு நாள் மட்டுமே

பிறகு, நிமிர்ந்தபொழுது திமிரென்றும் நடந்தபோது கர்வமென்றும் ஓடினபோது தலைக்கணமென்றும் வசைபாடிய மானிடர்களின் வாயில் நான் அபத்தமாக நிற்கிறேன்

பருவ வயதில் பாழாப்போன பரீட்சையமற்ற பாசவார்த்தைகள்.
பழகிய பிறகு பருவத்தில் விளைத்திடும் பசிவார்த்தைகள்.
விழுந்துவிட்ட நேரத்தில் சரிந்துப்போனது சாம்பலொன்று.
எழுந்தபோது எட்டிப்பார்த்த மழையாய் கலைந்தது. 
கலகலத்துப் போன என் கண்கள் ஏனோ கருக ஆரம்பித்தது.
கலையாடிய கைகள் கட்டப்பட்ட சருகாய் ஒடிந்தது.
நடைசூடிய கால்கள் மெல்ல இறங்கியது

இடுப்புக்கிடையில் ஒரு அழுத்தமான நம்பிக்கை. அலாதிய வலிகளின் உல்லாச ஓசை. பின்வாங்கும் பெருமூச்சு. பிதற்றிக் கொண்ட தொடைகள். பிணைக்கைதியாய் மற்றவர்கள் பார்வை

ஒளிந்து ஒளிந்து ஓடுகையில் ஓட்டம் கூட அடம் பிடித்த நிமிடங்களில் நான் அனுபவித்த வலிகளை அகற்ற கூட ஆட்கள் இல்லை. ஆமாம் ஆட்கள் இருந்தும் இல்லை

நின்ற இடம் ஒரு புனிதமான இடமாம். அதனால் தீட்டு பரவி திருத்தம் செய்திடுமாம், பாவம் அவர்களுக்கு புரியவில்லை, அங்கும் அந்த வலிகளை தாங்க முடியாமல் கல்லான கடவுளை

போதும். இது தீட்டென உணர்ந்தால் படைத்த அவன் இதில் பாவத்தை கழுவிக்கொள்ளட்டும்

மாதவிடாயே!
நீ என்ன செய்தாய், பாவம் நீ.
உன் வலிகளை விட இவர்களின் வரையறைகள் எனக்கு வலிக்கிறது! 😢

எங்கே கலாச்சாரம்

Embracing Gender Equality Through Social Entrepreneurship


எங்கே கலாச்சாரம்

அப்பழுக்கற்ற பவித்ரதத்தை போல ஊளையிடும் உயர்ந்த குடி மக்களே! காதலுக்கு கண்ணில்லை என்று சொன்னதே நீங்கள் தான். அப்புறம் எங்கே கலாச்சாரம் கறைபடிந்தது? எதை நீங்கள் கலாச்சாரம் என்று கருதுகிறீர்கள்? சிந்துசமவெளி நாகரீகத்தை மேம்படுத்த தான் நீங்கள் உழைக்கின்றீர்களா? மெசபடோமியாவின் பழக்கவழக்கங்களை பாதுகாக்க தான் பிறந்தீர்களா? லெமூரியாவின் பண்பாட்டை பண்படுத்த தான் படையெடுக்கிறீர்களா?

பழையன கழிதலும் புதியன புகுதலும் தான் கலாச்சாரம் என்ற தார்ப்பறியத்தை அறியாமல் அதெப்படி கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்கிறீர்கள் கலாச்சாரம் சீரழிகிறது என்று? மனித கழிவுகளை அகற்ற மனிதனை தேடும் நீங்கள் கலாசார காப்பகங்கள்?. கலப்படங்களை கலக்கம் இல்லாமல் சேர்க்கும் நீங்கள் பாதுகாவலர்கள்?. மனதில் மதிலிட்டு வீடுகளை தனிமைப்படுத்தி வீழும் நீங்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சீர்குலைக்க வந்த சீர்கேடுகள்.

உங்களைப் பார்த்து சிரிப்பதை சகித்துக் கொள்ளாத நீங்கள் தான், சகிப்புத்தன்மை பற்றி மேடைபோட்டு வாய்கிழிய பேசுகிறீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டால் எனக்கு அருவருக்கத்தான் செய்கிறது. இதென்ன தேசம்? உங்கள் வரையறைகளை தாண்டிய வரலாற்றில் காணப்போன பக்கங்களில் நீங்கள் கூறும் அத்தனையும் உள்ளது. அப்படி மருவிய ஒன்றைத் தான் நீங்கள் காலங்காலமாக கொண்டாடும் யாவும்

அதெப்படி மொழிகளை கடந்து வந்த நீங்கள், இனத்தின் அடையாளம் இதுவல்ல என்று உரிமையுடன் வழக்காடுகிறீர்கள். கலாச்சாரமே உனக்காவது தெரியுமா இவர்கள் யாரென்று. பண்பாடே நீ உணர்ந்தாயா இவர்கள் பழக்கவழக்கங்கள் யாவென்று. நாகரீகமே நீயாவது சொல் இவர்களின் நவநாகரிக நரித்தனத்தை? மகரந்தச் சேர்க்கை தனிப்பட்ட உரிமை. அது பிறப்புரிமை. அதுவே தனிமனித சுதந்திரம்

பழக்கவழக்கங்களை பண்பாடாக மாற்றி அதை கலாச்சாரமாக முன்னெடுத்து பின்னாளில் நாகரீகமாக வளர்ந்த எதையும் நீங்கள் அழித்துவிட முடியாது. உங்களுக்கு நடந்தால் உறவு, மற்றவர்களுக்கு நடந்தால் காமமா. அழுக்குகள் கூட உங்களை கண்டால் அருவருக்கும், ஒருவேளை உங்கள் அனுமானங்களை காதுகொடுத்து கேட்டால்.

உங்கள் தகாத உறவுகள் அர்த்தப்படும் என்றால், என் உறவு அரத்தப்படாதா? உடலின் தேவையை குறிவைத்த உங்கள் உறவுகளை விட உயிரோட்டம் நிறைந்த என் காதல் ஒன்றும் இளைத்ததில்லை. படைத்த இறை பாலினம் யாதென தெரியாத நீங்கள் பாலின சமத்துவம் பற்றி பேசாமல் இருப்பது தான் நல்லது.

நவநாகரிக கலாச்சார சீர்திருத்தவாதிகளே நான் உரைப்பது கேட்டீறோ!

இது தான் பாலினமா?

To achieve gender equality, we must first tackle our unconscious ...


இது தான் பாலினமா?

குறியீடுகள் இனப்பெருக்கத்தின் தார்ப்பறியம் என்றால், தேவையை நிறைவு செய்த பிறகு இனப்பெருக்கத்தை நிறுத்த வேண்டுமே


ஆனால் அதற்கு பின்னும் நடைபெறும் கூடல்கள், தேவைக்காக தான் நடக்கிறதா இல்லை இன்னும் தேவை இருக்கிறது என்று நடக்கிறதா.
உறவு என்று சொல்லி அசிங்கமான வார்த்தைகளை கொட்டாதீர்கள்

எதற்காக கூடல்கள் நடக்கிறது என்பதை அறியவில்லை.
எது உறவு என்பதை கூட அறியவில்லை.
உபதேசம் உரைக்க ஊருக்கு பத்து பேர் பைத்தியமாக சுற்றுகிறார்கள்.
பாலினங்களை படைத்த இறை பாலினம் யாதென அறிவீர்களா

அதற்கு குறியீடுகள் உண்டென வழிபடுபவர்கள்,
உண்மையில் அப்படி தான் இறை இருக்க முடியும் என்று கூற முடியுமா?

எதை முன்னிறுத்தி, உடலுறவுகள் நடைபெறுகிறது.
இது பாலின சமத்துவமா இல்லை பாலின கலாச்சாரமா. 
தன்னை முன்னிலை படுத்த நடக்கும் வேட்டையா.
வேடிக்கை மனிதர்கள் விவரம் அறிவார்களா 
இல்லை விவகாரம் விளைக்கிறார்களா

உண்மை யாதென இறைக்கு தெரியுமோ. ஒட்டிக் கொண்ட சதைகள் பாலுணர்வை தூண்டுகிறது என்றால், உணர்வுகளை குறியீடுகள் நிர்ணயம் செய்கிறதா இல்லை உணர்வுகளை வெளிப்படுத்த குறியீடுகள் உள்ளனவா

அர்த்தங்கள் அறிந்திட தகவல்கள் உள்ளனவா
அறிந்திட்ட பிறகு அதன் பின்னனி புலப்படுமா

உணர்வுகளை உள்ளடக்கிய ஊண் கொண்ட பிண்டம், எத்தனை பிரிவினையை நிகழ்த்துகிறது. அதற்காக அலைந்திடும் இந்த காம கடும்புனல் கூட்டம் கருதிடா உணர்வுகளை காமத்தின் நிலைப்பாடு என நினைக்கும் புரிதல் முறையானதா. 

இச்சைக்கு பிச்சையாகும் இந்த கூட்டம் எதைத்தான் அறிந்து வைத்திருக்கும்?

அட காமமே,
படுத்த படுக்கை களைவதற்குள் உன்மேல் விழும் அத்தனை குற்றச்சாட்டும் உன்னை மையப்படுத்தி நடக்கிறதென இந்த கூட்டம் முறையிடும் அவலத்தை நீ யாரிடம் முறையிடுவது என புலம்புவதற்கு நான் அடியெடுத்து கொடுக்கிறேனா

முன்னுதாரணமாக இருக்கும் இவர்கள் உன்னை முன்னுக்குப் பின் முரணாக குறைகூற நீ காரணமா.
கடவுளுக்கும் அடையாளம் தெரியாத இனம், கழுதைக்கு கால்கள் மூன்றென சொன்னால் நான் நம்புவேனா?

மஞ்சளில் இறை

In broad daylight, manual scavengers dip deep into sewage-filled ...


மஞ்சளில் இறை

அருவருக்கத்தான் செய்கிறது?

நம்மை போன்ற உயர்ந்த மனம் கொண்டவர்களை கண்டால் அருவருக்கத்தான் தான் செய்கிறது

இதென்ன தேசம்?
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த 5000 கோடியில் செலவு செய்து அதிவேக இணைய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி என்னத்த சாதிக்க போறீங்க?

இது தான் தொழில்நுட்பமா?
இதற்கு தான் படித்து பட்டம் பெற்ற விஞ்ஞானிகளா? 
சௌசம் இல்லாமல் சிறுநீர் பெய்து தம் மலத்தில் தாமே புரண்டு திரியும் பன்றிகள் கூட மனிதனை விட உயர்ந்தது என நான் கருதுகிறேன்

போட்டி போடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவதில்லை
பொதுவுடமை பேசும் அரசியல் கட்சிகள் குறிப்பிடுவதில்லை
அரசு மட்டும் கவனத்தில் வைக்கிறது? இவர்கள் இதற்காக தான் என்று
அவர்கள் மீது ஒரு கடுமையான காழ்புணர்ச்சி பார்வையாக மாறுகிறது.
அதற்கென ஒரு இனத்தையே உருவாக்கி அவர்களை தேசத்தின் கொடிய நோயான தீண்டாமையில் வாழ வைத்திருக்கிறார்கள் இந்த சமூக மலங்கள்

என்றாவது நீ தொட்டதுண்டா?
இல்லை வேண்டாம், அதை சிறிது நேரம் பார்க்க முடியுமா? 
அப்புறம் எப்படி அதற்கு ஒரு சமூகத்தை தேடுகிறார்கள்?
ரிசர்வேஷனு வாய்கிழிய பேசும் சாதிக் கட்சிகளின் இளைஞர்களே இந்த வேலைக்கு உங்களின் சாதிவிழுக்காடு அதிகரித்தால் வேலைக்கு சேர்வீர்களா?
இது தான் அரசியலமைப்புச் சட்டத்தின் வீரியமோ?
இதற்கு தான் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படுகிறதோ?
உயிருக்கு ஆபத்தான ஒன்றை விருப்பம் இல்லாமல் தேசம் திணித்ததன் காரணமாக இயங்கும் இவர்களுக்கு உங்களின் உயர்ந்த விருதுகள் இணையாகுமா? 

மற்றவர்களை கைதட்டி வரவேற்க்கும் நாம் தான் இவர்களை மூக்கை மூடுக்கொண்டு அழைக்கிறோம்
மலங்களை விட மனிதர்கள் உயர்வதே இல்லை. இதை அள்ளுவதால் அவர்கள் தாழ்வதும் இல்லை

மலத்தின் கூடாரம் இவர்கள் என்றால் படைத்த இறை இவர்களின் மஞ்சளில் நீராடி படைத்த பாவத்தை போக்கிக்கொள்ளட்டும்

சாமான்யர்கள் குரல்

Partition of India: What impact did it have? - CBBC Newsround

சாமான்யர்கள் குரல்

அடுக்கடுக்காய் எத்தனையோ ஜவுளி கடைகள்
அதற்கு அருகிலேயே சாமான்யர்கள் தலையில் துனிமூட்டைகள்

அழகழகாய் ஆடம்பர பொருட்கள் பக்கத்திலே கையில் உறையும் கைவினைக் கலைகள்

பளபளப்பாய் பாத்திரங்கள் நிற்கும் தூரத்தில் ரோட்டு கடைகள்

செயற்கை மாடங்களில் செறிவூட்டப்பட்ட பழங்கள் சுவற்றை தாண்டி நிற்கும் சிவந்த கைகளின் அழகுகள்

இவையெல்லாம் எதையோ சொல்கிறது. அதை கவனிக்காத மனங்கள் பரிகாசம் செய்து செல்கிறது

தூரத்தில் ஒலிக்கும் தொலைபேசியை அடையாளம் காணும் நாம் தான் கூடவே இருக்கும் பலரை அடையாளம் காண மறுக்கிறோம்

இவர்கள பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் பெருமை கொள்ள தகுதியான நபர்கள் இவர்கள் என்று நான் நம்புகிறேன்

அம்பானி நடைபோடும் அதே சாலையில் தான் இந்த சாமான்யர்கள் சலிக்காமல் உழைக்கிறார்கள் என்பதை நம்மால் மறுத்து விட முடியுமா? பாடங்களை பயிற்றுவிக்கும் ஒருவருக்கு தான் பயிற்சி பொருந்தும். ஆனால் அனுபவத்தை யார் வேண்டுமானாலும் கொடுக்க முடியும்

என்றோ ஒருநாள் நானும் அம்பானி ஆவேன் என்று தினமும் நினைத்துக் கொண்டு தன்னை உழைக்க வருத்திக் கொண்டு ஓடும் இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை தான் என்னை இவர்களின் மீதான பார்வையை மாற்றியது

அந்த நம்பிக்கை பிழைப்பு மீதானது அல்ல. உழைப்பு மீதான பெரும் விருப்பம். அது தான் அவர்களை என்றுமே உயிரோட்டம் நிறைந்த புதியநீராக ஓடச்செய்கிறது

சாமான்யர்கள் குரல் ஒலிக்கிறது. அதை தடைசெய்வது பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அல்ல. அதை குரலாகவே எண்ணாத நடைபாதை மானிட பரிகாசம் தான்

குப்பைகளை வாங்குபவர்கள் பெருமையாகவும் போடுபவர்கள் கீழாகவும் பார்க்க நாம் என்றைக்கு கற்றுக் கொள்கிறோமே அன்றே அந்த குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும்

நான் இருக்க மாட்டேனா

நான் இருக்க மாட்டேனா

உன்னை நான் வெறுக்க வேண்டுமென்றால்

ஓராயிரம் முறையாவது நான் சுக்குநூறாக உடைய வேண்டும்


ஒருமுறையாவது உன் நினைவுகளை என்னுள்ளே நிறுத்திட வேண்டும்

ஒருகணமேனும் உன் காதலை மறுத்திட வேண்டும்

இதெல்லாம் நடக்குமாயின் ஒரு நொடியேனும் என்னை கொன்றிட வேண்டும்

என்னை பிரிய வேண்டும் என்று முடிவானப்பின் எதற்கு பிரிவு என்கிற உறவு

கசப்பாகி போனது நான் மட்டுமல்ல நம் காதலும் தான்

நீ நடந்து போன பாதையை என் காதலால் துடைக்கின்ற துயரம் அறிவாயா?

என்றோ நீ விட்டுச்சென்ற ஆடையின் கசங்கிய வாசனைகள் என்னை கேட்கின்றன கூடல் இதற்காக தானா என்று

உன் குறுஞ்செய்தியால் விடிந்த என் காலை பொழுது கானாமல் போனதோ

காஃபியுடன் காத்திருந்த கைகள் கட்டப்பட்டதோ

உன் உயரங்களை தாண்டாத காலனிகள் முட்கள் ஆனதோ

சாலைப் பயணங்களில் வேகத்தடைகள் விடைபெற்றுக் கொண்டதோ

இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை 😏

உன்னால் என்னைப் பிரிந்து இருக்கமுடியுமானால் நான் இருக்க மாட்டேனா? மாறுகிறேன், மறக்கிறேன் மனம் திறக்கிறேன்

இதோ, எனக்கான காலை, காஃபி, காலணிகள், வேகத்தடைகள்

நானும் உனக்கு சொல்கிறேன்

மதங்கள்

Religion in crisis


மதங்கள்

தேவை அளிப்பை நோக்கியது

ஆசைகளை உள்ளடக்கியது

ஆசைகள் திணறல்களின் தெளிவு 

தெளிவோ தீர்க்கமான சிந்தனை

சிந்தனையோ வாக்கின் இனிமை

வாக்கோ வளத்தின் அடையாளம்

அடையாளம் மனதின் எழுகை
எழுகை தூண்டுதலின் தொடக்கம்
இந்த தொடக்கம் தான் அடிப்படை
அடிப்படையே திரிந்த தேவையாக இருக்கிறது

அப்படியென்றால் எதுவும் இங்கு தனித்து இயங்கவில்லை. இது ஒ‌ட்டுமொ‌த்த கூட்டுமுயற்சி

முறன்களின் தொகுப்பாக இந்த இயற்கையே இருக்கையில் நடைமுறை முறன்கள் இயல்புதான்
இதை மறுக்கமுடியுமா? இன்று ஏதோ ஒரு வெற்றிடம் நம்மை சூழ்ந்து அதற்கான விலையாக நம்முடைய நேரத்தை கொடுக்கிறோமே அது தான் முறன்களாக மாறுகிறது

அடிப்படைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியாத அனுகுமுறை தான் அவசரமாக அநீதியை ஆங்காங்கே நிகழ்த்துகிறது

ஏன்? நாம் புத்தனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் குறைந்தபட்ச மனிதத்தன்மையை வெளிப்படுத்த பயம் கொள்கிறோமே! எதற்காக?

சித்தாந்தங்கள் வாசித்த நம்முடைய மனுகுலம் மனித உரிமைகளை அடக்கி ஆளுகையில், அந்த சட்டத்தை உடைப்பதில் என்ன தவறு? முகத்திரையில் ஒளிந்து கொண்டு முற்போக்கு சிந்தனை என்கிற பெயரில் பழைய அனுகுமுறையை பிற்போக்காக கருத்தியல் ரீதியாக திணிப்பது எவ்வளவு பெரிய வஞ்ச மனப்பான்மை

இங்கு குற்றங்கள் பிறக்கப்படுவதில்லை
உருவாக்கப்படுகின்றன

இந்த சமூகத்தில் பெரும்பாலான உரிமைகள் வேண்டுமென்றே ஆழமாக புதைக்கப்படுகிறது

அதற்கு பின்னால் உள்ள அத்தனை பேரின் முகங்களின் உண்மையை அலசுவீர்களேயானால் அவர்கள் மத உணர்வோடு அலையும் வெறியர்கள்

மதங்கள் தவறுகளை ஒருபோதும் செய்வதில்லை
இந்த மதங்களை நிர்வகிக்கும் மத தலைவர்கள் மட்டுமே!

சமூக சிக்கல்கள்

Capturing Voice of Customer (VOC) – Business Audit Compliance


சமூக சிக்கல்கள்

எனக்கான குரலை என்வாயிலாக எழுப்பினால் அது அடுத்தவருக்கு எப்படி இரைச்சலாகும்? எனக்கே தெரியாமல் என்மீது சுமத்தப்பட்ட ஒடுக்குமுறை வன்கொடுமைகளை என் கைப்பட நான் வரலாறு என்கிற பெயரில் எழுதுகிறேன்


உண்மையில் அது ஆபத்து அல்ல. அசிங்கமும் அல்ல. அறியாமை கூட இல்ல. அதை அறிய முற்படாத எண்ணம் மட்டுமே

கையெழுத்து மறைக்கப்படவில்லை மாறாக மறுக்கப்பட்டது. இது தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கலந்தோடும் கலாசாரம்

அவரவர் தேவை என்ன என்பதை கூட்டம் போட்டு கட்டமைத்து அடுக்குமாடிகளாக சமூக தேவைகளை முறன்களாக மாற்றியுள்ளோம். 
விளைவுகளை மட்டும் அடுத்த தலைமுறைக்கு தள்ளிவிட்டு அதன் பயனாளியாக மட்டும் வாழ நினைக்கிறோம்

கருத்துக்களால் அழுகிய அத்தனை பெரிய இனத்தின் அடையாளம் தெரியாத சிலர் எதோ வந்தது வாழ்வதற்கே என்பது போல் ஓடுகிறார்கள்.
உங்கள் ஓட்டமும் அதற்கான நாட்டமும் உங்களுக்கு பொருந்தாதது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
மாற்றப்பட வேண்டியது சமூக சிக்கல்கள் இல்லை
சிக்கல்கள் உருவாக காரணமாக இருக்கும் வாய்ப்புகள் மட்டுமே

திருமணம்

Men want to marry younger women. Don't believe it if you are told ...


திருமணம்

திருமணம் கூட நம்பிக்கையின்மையின் அடையாளம் தான் என்று நான் நினைக்கிறேன். தமிழர்கள் திருமணம் என்ற வைபவத்தை கடைபிடித்தவர்கள் இல்லை. களவு வாழ்க்கையில் நுழைந்து பிறகு கற்பு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் நாம்!


என்று சந்தேகம் எழுந்ததோ அன்றே தாலி என்கிற முறைமை தேவைப்பட்டது. அகக் கோட்பாட்டின் சீர்கேடு திருமணம் என்கிற பெயரில் வந்ததாக கருதுவதில் தவறில்லை

நீதி காப்பியம் தோன்றியதற்கு கன்னகி காரணமாகவும் இருக்கலாம். ஆனால் கோவலனை சீர்செய்ய தவறிய பொறுப்பு கன்னகியைச் சேரும். அவள் தேரா மன்னா என்றதற்கு பதில் தோற்றா ஒழுக்கா என்று கோவலனை கேட்டிருந்தால் அவளின் வாழ்வு இன்புற்றிருக்கும்

இந்த தவறு சமூகத்தை சார்ந்த அறநெறி கொள்கைகளின் முறையின்மையின் வெளிப்பாடு

எல்லை நீத்த பிரபஞ்சத்தை ஒரே ஒரு சொல்லில் சுட முடிந்த சீதை ராமனுக்கு காத்திருக்க வேண்டியதன் அவசியம் அறிவேன். ஆனால் ராமனின் தவறுகள் வேடிக்கையாக பார்க்கப்படுவதும் ராவணனின் செயல் தூற்றப்படுவதும் சமூகத்தை ஒரு முறையாவது கேள்வி கேட்க தோன்றுகிறது

வாழ்வியல் பந்தங்களில் சார்பு நிலை சரியில்லாமல் போனதற்கு சீதையின் தவறு ஒரு மகச்சான்று

தொல்காப்பியம் கூட புறத்தை இருகூறுகள் கொண்டே சாடியதன் அர்த்தம் அகத்திற்கு கொடுத்த முன்னுரிமையை வெளிக்கொனர்கிறது

தன்னை இழந்த அகதி தன் உடையை இழக்க தகுதி வாய்ந்தவன் இல்லை, இருப்பினும் பந்தயப் பொருளாக த்ரௌபதியை வைத்தது உரிமை மீறல் தானே

அறம் வளர்த்த சபையில் தர்மம் ஸ்தாபிக்காமல் போனதற்கு திருமண பந்தங்கள் ஒழுங்காக வரையறை செய்யாமல் போனதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறதே

சபை மௌனத்தை ஆதரித்தது சத்திய வாக்குரைக்கும் உத்தமனின் வேதியரை நிற்கவைத்து கேள்வி அம்புகளை தொடுத்தது போல இருந்திருக்கும்.

புராணங்களை மத உணர்வோடு அனுகாமல் உளவியல் ரீதியாக அனுகுவது மிகவும் அவசியம் என்று நான் நம்புகிறேன். இவை அனைத்தும் நமக்கு நாமே புரிதலை ஏற்படுத்த காலத்தால் வடிவெடுத்த  வாசகங்கள்.

ஓடமும் ஒரு நாள் ஓடையில் ஓடும்
ஓடையும் ஒரு நாள் ஓடத்தில் ஓடும்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யார்த்தன கரணம் என்ப

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...