வியாழன், 10 செப்டம்பர், 2020

கம்ப உளவியல்

கம்ப உளவியல்

நாம் உறவுகளில் நம்மை முழுமையாக திளைக்கும் பொழுதுகளில், நன்மை, தீமை மற்றும் சூழ்ச்சி போன்றவற்றால் மூழ்கடித்து உண்மையை பறைசாற்ற முடியாமல் திணறுகிறோம். நான் அதிகளவில் கேட்டு படித்த இதிகாசங்களில் வரலாற்றுப் பெருமை மிகுந்த கம்பராமாயணம், மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் என்னை ஒரு திறவுகோல் போல மாற்றியது. அதிலும் குறிப்பாக உளவியல் ரீதியாக பல முகங்களின் பன்முகத்தன்மையை நான் அலசி ஆராய இவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.

நாம் மட்டுமல்ல, அனேக ஜீவராசிகளும் தாயின் மீது அதீத பாசம் கொண்ட பக்தர்கள் என்பதை அறிவோம். தாய் என்பவள், உயிர்ப்புடன் நம்மை உயிர்வித்த சிரம் மட்டுமல்லாமல் அவள் நம்முடைய ப்ராணமாகவும் மாறியவள். ஆனால் கம்பனை படிக்கையில், கைகேயி செய்த தவறினால் அவளின் தாய்மையை அலச நான் முற்ப்பட்டேன். இந்த ஏகாந்த எண்ணம் எழுந்த நிலையில், இது சரியா தவறா என்று நான் யோசனையின் நீட்சியில் கிடந்த வேளைகளில், கம்பனே அதற்கான உபாயத்தை நல்கினான்.
கைகேயி, ராணியாகவே பிறந்து, வளர்ந்து, பிறகு நாடாலும் மன்னனின் துணையாக இருக்க வாய்ப்பு பெற்றவள். ஆனால் அவளுக்கு அதுவே பெரிய தலைக்கணமாக மாறி, ராஜ்ஜியத்தை பற்றி கடைசி வரை தன் ராணி அந்தஸ்தை பெற திட்டம் வகுத்து மேடையேற்றினாள். கைகேயி புதல்வன் பரதன், கோசலையின் புத்திரன் ராமன். ராமன் முதல் புதல்வன் என்பதாலும் அவன் பவித்திர சூத்ரதாதி என்பதாலும் அவனே முதலில் நாடாளுவான் என்பதை அறிந்து கொண்டு அவனை வேஷமிட்டு பாசத்துடன் வளர்த்தாள்.
ஒரு நாள் அரண்மனையில் ராஜ்ய உரிமை சண்டையாக உருவெடுக்கவே, கைகேயி மிகு‌ந்த கவலை உற்றாள். இதற்கு காரணம் ராணி என்கிற பெருமை பறிபோகுமோ என்றதால் தான். ஒருவேளை ராமன் அரசனாக மகுடம் சூடினால், கோசலையின் மீது மட்டுமே அதிகபட்சமாக கவனமும் மரியாதையையும் இருக்கும் என்பதை மந்த்தரை, அதாவது கூனி கலகமூட்டவே வெகுண்டெழுந்து கலகத்தை பெரிதாக மாற்றினாள். அதனால் ராமன் வனவாசம் செய்ய முடிவானதும் பரதனே நாடாள மன்னன் ஒப்புக் கொண்டார்.
ராமன் வனவாசம் செய்ய புறப்பட்டான். ஆனால் இங்கு தான் தாய்மையின் தன்மையை கம்பன் அழுத்தமாக நிறுவுகிறான். செய்தி அறிந்து அரண்மனை சேர்ந்த பரதன், தன் தாயிடம் கேட்டான். அவளோ, அதற்கு தகுந்தபடி பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் கோபம் கொண்டு வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்.
பரதா, நான் ராமனை நாடாளவிடாமல் உன்னை ராஜாவாக நிலைநாட்ட எண்ணம் கொண்டு அதை இன்று முடித்து விட்டேன் என்றாள். பரதனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட அவள் உனக்காக நான் செய்ய சூழ்ச்சியை நினைத்து பாராட்டாமல் இப்படி கோபத்தில் குதிக்கிறாயே என்று கேட்கையில்
கீண்டிலன் வாய் அதுகேட்டும் நின்ற நான்
என்று கூறவே கைகேயி அதிர்ந்து போனாள். அதாவது நீங்கள் இவ்வளவு பெரிய சூழ்ச்சியை செய்ததாக கூறும்போது, கூறிய உங்கள் வாயை கிழிக்காமல் நிற்கிறேனே ஏன் தெரியுமா, என் அண்ணன் ராமன் கோபித்து கொள்வார் என்பதால் தான். நீ தாயல்ல பேய் என்று சபித்துக் சென்றான்.
இங்கே என்ன செய்தியை கூற வருகிறேன் என்றால், தவறு செய்யும் மனிதர்களை தண்டனை கொள்வது தான் தர்மமும் கூட. ஆனால் காப்பிய நோக்கத்திற்காகவும் தாய்மையின் தன்மையை இகழந்திட கூடாது என்பதாலும் கம்பன் இப்படி எழுதியுள்ளான் என்று நினைக்கிறேன்.
தவறு கண்டிக்கத்தக்கது. அது தாயாகவே இருந்தாலும் சரி. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கம்பனுக்கு இலக்கியம் தந்த எழுதுகோல். ஆனால் கம்பனும் தாய்மையின் படைப்பள்ளவா. அதனால் தான் அவன் தண்டனையை எதிர்த்து குற்ற உணர்ச்சியை கைகேயிக்கு விளைவித்தான்.
வாழ்வியல் இலக்கணத்திற்காக எழுத்தானியுடன் நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...