ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

எனக்கு ஒரு ஆசை

 எனக்கு ஒரு ஆசை

எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முட்களை நிறுத்திவிட்டு அதன் அருகிலேயே உட்கார எனக்கு ஒரு ஆசை

ஏனென்றால் இந்த முட்கள் என் நடத்தையை தீர்மானிக்கிறது. இரவில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் விலைப்பொருளாக மாற்றுகிறது. என் அனுமதி இல்லாமல் என் மேனியில் மேவுகின்ற விரல்களை தந்துவிடுகிறது.
உதிரம் வெளியேறும் வரை வெற்றிடம் வழிய ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. எனக்கு முகமில்லை. ஆன்மாவும் இல்லை. கணவன் தொடங்கி கடைக்காரன் வரை என் உடல் வெறும் உடலாகவே மட்டுமே பார்க்கப்படுகிறது.
🙁

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...