நவீன சஹாரா
பாடத்திட்டத்தின் முதல் பக்கத்தில் பதிந்த அறம், படித்தவர்கள் மனதில் படிந்திருந்தால் இத்தனை உயிர்கள் இங்கே துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உப்பில் தொடங்கி உடை வரை அத்தனைக்கும் இங்கே வரிகள் வரிசையில் நிற்கின்றன. இத்தனை வரிகள் வரிசையில் இருந்தும் நமது தேவைகள் தீர்ந்தபாடில்லை.
உடன்கட்டை ஏறிய காலத்தில் நடந்த கொடுமைகள், இப்போது நவீனத்துவம் அடைந்திருக்கிறது. இன்றும் கூட ஒத்தையடி பாதையில் ஒரு கூட்டம் விதி செய்கிறது. பாதையில் பள்ளம் மேடுகள் இருக்கலாம். ஆனால் பாதையே இல்லாமல் இருப்பது நமது தவறு.
எங்கே அதிகாரம் ஆள்கிறதோ அங்கே அடக்குமுறைக்கு எதிராக வன்முறைகள் நியாயமாகிறது. இன்னொரு நவீன சஹாரா தமிழகத்தில் பரந்து விரிந்து கிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக