வெறுமையை சுகித்ததுண்டா?
நீ என்னை தழுவிய சிறுபொழுதுகளை எண்ணி எண்ணி ஓடும் எண்ண ஓடத்தில் நான் மட்டும் மூழ்கி தத்தளிக்கும் ஒவ்வொரு நொடியும் அப்படித்தான் இருக்கும்.
நீ அமர்ந்த நாற்காலி என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறது. கிணத்தடியில் துருப்பிடித்த குவளை வைரமாய் மின்னுகிறது. நான் வாசல் தாண்டுகையில் "சீக்கிரம் வந்துடுங்க" எனும் மழலை குரல் அசரீரியாகிறது. துக்கம் தாளாமல் தூக்கிலிட கயிறெடுத்தால், மனம் இறந்ததை உடல் உணர்த்துகிறது. நீ இல்லாத வாழ்க்கையில் நான் எதற்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக