ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

புன்னகைப்பூ

World Smile Day aims at spreading random acts of kindness ...


புன்னகைப்பூ

என்றோ ஒருநாள் எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படம் இன்று காதல் வண்ணங்கள் நிரம்பிய ஓவியமாய் நிறைந்துள்ளது.

உன் வெட்கத்திமிரில் வெதவெத்துப்போன என் வியர்வைகள் இன்று பயிர்களாய் வளர்ந்துள்ளது. இன்னும் சில வருடங்களுக்கு ஒரேயொரு ஆசை.
வானம் சிவக்க வெற்றிலை போடும் உன் செவ்வாய்க்கு சுண்ணாம்பு போடும் விரலாய் நான் இருந்திட வேண்டும். உன்னை சுமக்கும் பாக்கியம் எனக்கு வாய்க்க வேண்டும்.
நாம் வாழ்ந்த வாழ்க்கையை, கம்பன் பாட வேண்டும். காதம்பரி ராகத்தின் இடைவெளியில் நம் காதல் சேர வேண்டும். வாழ்க்கையை வாழ்ந்த பூரிப்பில் பரலோகம் போக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...