இச்சை தீயில் இதயம்
ஐந்தடுக்கில் அறுசுவை விருந்திருந்தும் உன் எச்சில் அமிர்தம் அருந்துவதற்கு நோன்பு கொண்ட நாவிற்கு என்ன தர போகிறாய்?
கட்டிலில் விழுந்து கலவியில் ஊர்ந்து காலையில் எழுவது தான் காமம் என்றால், இடைவெளியில் கிடக்கும் ஆசை தீக்குச்சிகளை வெப்பமூட்டுவது எப்போது? இருவிரல் இறுக்கத்தில் காற்று ஊஞ்சல் கட்டி ஆடுகிறது.
இச்சை தீயில் இதயம் உறைகிறது. இதழ் மீது இன்னொரு சஹாரா படர்கிறது. ஏனோ மனக்கலவரம் பித்தத்தைக் கூட்டுகிறது. நரம்புகளின் வரம்புகள் விரிவடைகிறது. இரத்த நாளங்களில் அழுத்தம் கூடுகிறது. இடையிடுக்கில் எரிமலை கொதிக்கிறது. இன்னும் தாமதம் ஏனோ!
காமம் நோயா?
கலவு மருந்தா?
காரணம் நீயா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக