அலைபேசியில் கொஞ்சம் நான்
தொலைதூரத்தில் இருக்கும் உன்னை என்னோடு சேர்க்கும் இந்த அலைபேசியில் கொஞ்சம் நான் நானாக வாழ்ந்து விட்டு போகிறேன்!
கூடி தழுவி கொஞ்சி பேசி குழல்கள் கலைத்து விவரிக்க முடியாத வியர்வையில் வெள்ளாமை கண்ட கடைசி நொடிகளில் இன்னும் நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்!
கதைத்த பொழுதுகள் இன்றும் கூட காதோரம் இசைக்கின்றது. நேரங்களில் உறைந்த நம்மை விட்டு இந்த பிரபஞ்சம் எங்கேயோ தொலைந்துவிட்டதென அலைப்பேசி என்னை அழைக்கிறது உன்னருகே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக