தீராத நோய்
வெயிலில் உருகும் வெண்ணெயை உண்ணவும் முடியாமல் அதை பத்திரமாக எடுத்து வைக்கவும் முடியாமல் தவிக்கும் வேதியல் மனமாற்றத்தை உரைத்திட முடியுமோ?
என்ன நோய் இது? மருந்தே நோயாகிறது. நோயே மருந்தாகிறது. மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இது ஏற்படுமோ? கல்லாய் விரைக்கும் கலவியில் காதல் நீர்க்குமோ? விளங்க முடியாத விவரங்களுக்கு விளக்கவுரை ஏற்ப்புடையதா?
தீரா நோயை தீர்த்துக் கொண்டால் தீர்த்திட முடியாத நோயை மீண்டும் கூட்டுகிறது இது. அடக் காமமே உனக்குள் காமம் வராதோ? நீயும் என்போல் புலம்ப மாட்டாயோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக