எனக்கென நான்
உன்னைத் தவிர வேறு யாரும் நிரப்பிடவே முடியாத இடத்தை வெறுமையை கொண்டு நிரப்பிட என் இதயம் முற்படுகிறது. வெறுமை நிரம்பிய என் வெற்றிடத்தில் வழிந்தோடும் நிறைவாக நீ வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
எனக்கென நான் இல்லாமல் போகிறேன் உனக்குள் நான் உலாவிய கணங்களில். இந்த அனுபவத்தை நான் முதல்முறையாக ரசிக்கிறேன். அதனால் அதை தினமும் உன்னிடம் எதிர்ப்பார்க்கிறேன்.
இதோ என்னோடு சேர்ந்து என் புகைப்படம் நோக்கும் பார்வையை பரிசீலனை செய்வாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக