வியாழன், 10 செப்டம்பர், 2020

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம்

வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் ''தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல.

நூல்கள் காலத்தை ஒட்டியது. காலத்தின் நோக்கத்தை அடைய கவிதைகளை உயர்த்த வேண்டிய தேவை உள்ளதால் கருத்தும் அதைச் சார்ந்த முரண்களும் விவாதிக்கப்படாமல் இருக்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொண்ட சமூக அமைப்பு, எத்தகைய சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்தியா மிகச் சரியாக முன்னுதாரணம்.
தமிழ்தேசியம் பேசும் நாட்டில் சமூக சிக்கல்கள் சின்னங்களாக உருவெடுக்கிறது. நாளடைவில் அதுவே பழக்க வழக்கங்களை முன்வைத்து கலாச்சார மையமாக வழியமைத்து நாகரீகமாக பழிவாங்குகிறது.
வள்ளலாரின் கூற்றுக்களை ஒருவேளை ஏற்றுக் கொண்டிருந்தால் பெரியாரின் பகுத்தறிவு ரீதியான கொள்கைகளுக்கு தமிழகத்தில் வேலையே இல்லை!
சமூக பார்வையில் இருந்து எறியப்படும் ஒவ்வொரு பார்வையும் எங்கேயோ ஒரு பெரியாரை, வள்ளலாரை, தீரனை தோற்றுவிப்பதில் தவறேதும் இல்லையே. மதம் முழுக்க முழுக்க ஒரு கட்டமைப்பின் மூலம். அதற்கு முரணாக எழும் பகுத்தறிவு மத மூடநம்பிக்கைகளை களைவதில் என்ன தவறு இருக்கிறது?
மதம் என்பது சீரமைப்போ சிக்கலோ? மனித சங்கிலியின் தேடல் மேலோங்குவதை இரண்டும் வெவ்வேறு கோணங்களில் புனரமைத்தால் நன்று.

கம்ப உளவியல்

கம்ப உளவியல்

நாம் உறவுகளில் நம்மை முழுமையாக திளைக்கும் பொழுதுகளில், நன்மை, தீமை மற்றும் சூழ்ச்சி போன்றவற்றால் மூழ்கடித்து உண்மையை பறைசாற்ற முடியாமல் திணறுகிறோம். நான் அதிகளவில் கேட்டு படித்த இதிகாசங்களில் வரலாற்றுப் பெருமை மிகுந்த கம்பராமாயணம், மகாபாரதம் மற்றும் சிலப்பதிகாரம் என்னை ஒரு திறவுகோல் போல மாற்றியது. அதிலும் குறிப்பாக உளவியல் ரீதியாக பல முகங்களின் பன்முகத்தன்மையை நான் அலசி ஆராய இவை எனக்கு பெரிதும் உதவுகின்றன.

நாம் மட்டுமல்ல, அனேக ஜீவராசிகளும் தாயின் மீது அதீத பாசம் கொண்ட பக்தர்கள் என்பதை அறிவோம். தாய் என்பவள், உயிர்ப்புடன் நம்மை உயிர்வித்த சிரம் மட்டுமல்லாமல் அவள் நம்முடைய ப்ராணமாகவும் மாறியவள். ஆனால் கம்பனை படிக்கையில், கைகேயி செய்த தவறினால் அவளின் தாய்மையை அலச நான் முற்ப்பட்டேன். இந்த ஏகாந்த எண்ணம் எழுந்த நிலையில், இது சரியா தவறா என்று நான் யோசனையின் நீட்சியில் கிடந்த வேளைகளில், கம்பனே அதற்கான உபாயத்தை நல்கினான்.
கைகேயி, ராணியாகவே பிறந்து, வளர்ந்து, பிறகு நாடாலும் மன்னனின் துணையாக இருக்க வாய்ப்பு பெற்றவள். ஆனால் அவளுக்கு அதுவே பெரிய தலைக்கணமாக மாறி, ராஜ்ஜியத்தை பற்றி கடைசி வரை தன் ராணி அந்தஸ்தை பெற திட்டம் வகுத்து மேடையேற்றினாள். கைகேயி புதல்வன் பரதன், கோசலையின் புத்திரன் ராமன். ராமன் முதல் புதல்வன் என்பதாலும் அவன் பவித்திர சூத்ரதாதி என்பதாலும் அவனே முதலில் நாடாளுவான் என்பதை அறிந்து கொண்டு அவனை வேஷமிட்டு பாசத்துடன் வளர்த்தாள்.
ஒரு நாள் அரண்மனையில் ராஜ்ய உரிமை சண்டையாக உருவெடுக்கவே, கைகேயி மிகு‌ந்த கவலை உற்றாள். இதற்கு காரணம் ராணி என்கிற பெருமை பறிபோகுமோ என்றதால் தான். ஒருவேளை ராமன் அரசனாக மகுடம் சூடினால், கோசலையின் மீது மட்டுமே அதிகபட்சமாக கவனமும் மரியாதையையும் இருக்கும் என்பதை மந்த்தரை, அதாவது கூனி கலகமூட்டவே வெகுண்டெழுந்து கலகத்தை பெரிதாக மாற்றினாள். அதனால் ராமன் வனவாசம் செய்ய முடிவானதும் பரதனே நாடாள மன்னன் ஒப்புக் கொண்டார்.
ராமன் வனவாசம் செய்ய புறப்பட்டான். ஆனால் இங்கு தான் தாய்மையின் தன்மையை கம்பன் அழுத்தமாக நிறுவுகிறான். செய்தி அறிந்து அரண்மனை சேர்ந்த பரதன், தன் தாயிடம் கேட்டான். அவளோ, அதற்கு தகுந்தபடி பதில் சொல்லி சமாளிக்க முடியாமல் கோபம் கொண்டு வார்த்தைகளை விட ஆரம்பித்தாள்.
பரதா, நான் ராமனை நாடாளவிடாமல் உன்னை ராஜாவாக நிலைநாட்ட எண்ணம் கொண்டு அதை இன்று முடித்து விட்டேன் என்றாள். பரதனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட அவள் உனக்காக நான் செய்ய சூழ்ச்சியை நினைத்து பாராட்டாமல் இப்படி கோபத்தில் குதிக்கிறாயே என்று கேட்கையில்
கீண்டிலன் வாய் அதுகேட்டும் நின்ற நான்
என்று கூறவே கைகேயி அதிர்ந்து போனாள். அதாவது நீங்கள் இவ்வளவு பெரிய சூழ்ச்சியை செய்ததாக கூறும்போது, கூறிய உங்கள் வாயை கிழிக்காமல் நிற்கிறேனே ஏன் தெரியுமா, என் அண்ணன் ராமன் கோபித்து கொள்வார் என்பதால் தான். நீ தாயல்ல பேய் என்று சபித்துக் சென்றான்.
இங்கே என்ன செய்தியை கூற வருகிறேன் என்றால், தவறு செய்யும் மனிதர்களை தண்டனை கொள்வது தான் தர்மமும் கூட. ஆனால் காப்பிய நோக்கத்திற்காகவும் தாய்மையின் தன்மையை இகழந்திட கூடாது என்பதாலும் கம்பன் இப்படி எழுதியுள்ளான் என்று நினைக்கிறேன்.
தவறு கண்டிக்கத்தக்கது. அது தாயாகவே இருந்தாலும் சரி. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே கம்பனுக்கு இலக்கியம் தந்த எழுதுகோல். ஆனால் கம்பனும் தாய்மையின் படைப்பள்ளவா. அதனால் தான் அவன் தண்டனையை எதிர்த்து குற்ற உணர்ச்சியை கைகேயிக்கு விளைவித்தான்.
வாழ்வியல் இலக்கணத்திற்காக எழுத்தானியுடன் நான்

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இரக்கமில்லா இந்திய அரசியல்

இரக்கமில்லா இந்திய அரசியல்

இங்கே இறை காப்பாற்றும் என நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் தள்ளாடும் ஒவ்வொரு பிரஜையின் மிகச்சிறிய ஆசை, வீடு போய் சேரமுடியாதா என்பது தான்.
அரசின் கொள்கையில் நீதிமன்றங்களுக்கு வேலையில்லை என தீர்ப்பெழுதும் நடுநிலை தராசில் முள் இல்லாதது வழக்கத்திற்கு மாறானதாக எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சாமான்ய மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குவதால் மேம்படும் என்பது பழக்கப்பட்ட ஒன்றானாலும் 20 லட்சம் கோடியில் உருவாக்கப்படும் உயர்தர துணுக்குகள் வேதனையான உண்மை.
எனக்கு அரசின் கொள்கையில் எதிலும் உடன்பாடு இல்லை என்றாலும் சிலவற்றில் அழுத்தமாக உண்டு.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் மீதான கடுமையான அக்கரை உள்நாட்டு மக்களின் மீது இல்லாததின் பின்னால் உள்ள அரசியல் நோக்கத்தை பாராட்டியாக வேண்டும்.
மது பிரியர்களை கொண்டாடும் மாநிலங்களில் மனித உயிர்கள் பற்றிய கவலைகள் சிறிதும் இல்லாமல் அமல்படுத்தப்படும் உயர்ந்த அவசர சட்டங்களை மனதார பாராட்டிட வேண்டும்.
இதைவிட இன்னொரு அபூர்வமான செய்தி என்னவென்றால், கோடிக்கணக்கான மக்களின் கூந்தல் பராமரிப்பு. மக்களின் கூந்தலை பராமரிக்க செலவழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொண்டைக் கடலை மதிப்பு மிக்க இந்திய வருவாய்கள் தான்.
கஞ்சிக்கு வழியில்லாமல் மக்கள் போராடும் போதும் அவர்களின் தொழில்களை மேம்படுத்த கொடுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி கடன்கள்.
நிதி அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட தொகுப்பேடுகள் பொருளாதார முன்னேற்றத்தை வேகமாக வெளிப்படுத்தினாலும், அரசின் அவசர கால நடவடிக்கைகள் மக்களின் கடைசி ரூபாயை கூட சுரண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாயைக் கூட ஈட்டாத திறமைமிக்க அரசு மக்களிடம் பிச்சை கேட்பது இனி வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகாரப்பூர்வமாக அரசியல் சாசனத்தில் இணைக்கப்படும் என்பது தான் எதிர்கால இந்தியா. டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா அப்புறம் இன்னும் வரப்போகும் எல்லா கூந்தல் இந்தியா திட்டங்கள் தான்.
திட்டமிடுதலை திறமையாக செய்யும் பாரத பிரதமருக்கு என் கூந்தல் வாழ்த்துக்கள். வரப்போகும் அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களை விட்டு இந்தியா வேளியேறும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இருக்கட்டும். இந்தியாவின் நீதிமன்றங்களில் தீர்ப்பு எழுதப்படுவது மைகளினால் அல்ல. எப்போதோ இறந்த பேனாவில் ஊற்றப்பட்டிருக்கும் இரக்கமில்லா அரசியல் மட்டுமே.

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...