ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

பேராயுதம்

Cybercriminals face the sword of justice with new London court


பேராயுதம்

நான் கொண்ட மார்பும் யோனியும் தான் உன்னை தீண்டயது என்றால் இன்று முதல் அவற்றை தீண்டத்தகாத ஒன்றாக அறிவிக்கிறேன்
சுற்றமும் நட்பும் சூழும் என்று தானே உயிரோடு நடமாடினேன், ஆனால் என் உடம்பை சூறையாடுவீர்கள் என்பதை அறிகிலேன்
இனி பெண் என்று பிறப்பேனேயானால் வெறும் ஊண் தாங்கிய பிண்டமாகவே பிறப்பேன். இனியாவது இந்த காமம் அழியட்டும்

காமமே நீயும் ஆணுக்கு அடிமையாகி விட்டாயா?
இல்லை உன்னையும் ஆடையின்றி நடமாட வைத்தார்களா?
பரவாயில்லை விட்டுவிடு?
இவர்கள் தாயின் தாய்ப்பாலை கூட காமபானமாக பருகிய இழுக்குற்றோன்கள்
இனி ஆடைகள் எனக்கு தேவையில்லை, ஏனென்றால் நான் உடுத்தியிருந்தாலும் அவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை
உடைகள் மறைக்கத் தான் செய்தார்கள் என்று இன்று வரை நினைத்திருந்தேன்
ஆனால் இது தவறு, பெண்களின் உடல் வெளிச்சம் போட்டு காட்டவே நெய்தார்கள் போல
நான் போகும் வழியெங்கும் தீக்குச்சியாக ஒளிரும்கண் என்று நினைத்தேன் ஆனால் என் ஆடைகளை எரிக்கத் தான் கொண்டுவந்தாய் என்பதை மறந்துவிட்டேன்
மன்னியுங்கள்
நம்பிக்கை வைத்தது தவறு தான்
கற்பகிறகத்தில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள்
காரணம் தெரியவில்லை, ஆனால் இன்று தெரிந்து கொண்டேன்
பாவம் கடவுளும் கற்பழிப்பு செய்யப்படுகிறாள், ஆதனால் தான் பெண்களை பாதுகாப்பு செய்ய வரவேண்டாம் என்று நினைத்தாளாம்
பாவம் அவளுக்கு தெரியவில்லை புறத்தில் கூட காமமே என்று
நான் தெரியாமல் கேட்கிறேன்
பெண் என்றாலே காமம் என்பது விதியா?
இன்னும் எத்தனை ஆசிஃபாக்களையும் நிர்பயாக்களையும் நான் பலிகொடுப்பேன்
பிஞ்சு முதல் பேதை வரை உடல் என்பது காமம் என்று தானே நினைக்கிறீர்கள்
அறிவீர்களா என் அடிவயிறு வலியின் ஆழத்தை?
வாழ்ந்து கொண்டே சாகவும் செத்துக் கொண்டே வாழவும் முடியுமானால் மாதவிடாய் பழகிப்பார்
புல்லறுக்கும் கலன் ஒன்று உயிர் அறுக்க துடிக்கும் துன்பம் சுகித்ததுண்டா?
இதற்கிடையில் உங்கள் காமம் களிப்புறுமா?

பெண் என்ற பேராயுதம் ஆண்களை களைய முற்பட்டால் இனி புவியில் புற்கள் கூட மிஞ்சாது
பாவம் அன்பு என்பது மட்டுமே அவளின் ஆணிவேரானதால் துன்பத்தை தர இயலவில்லை
ஏனென்றால் இவள் தாய்மையின் படைப்பள்ளவா!

😢

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சமூக பார்வையில் மதம்

சமூக பார்வையில் மதம் வள்ளுவன் கூட அறியாமையின் மடியில் தவழ்ந்ததால் தான் '' தோன்றின் புகழோடு தோன்றுக" என்று எழுதியிருந்தார் போல. ...